கவிதை

முனைவர் தமிழண்ணல் கையறுநிலை

வல்லதமிழ் ஓங்க வரலாற்றை நன்காய்ந்து நல்லபுகழ் நுால்களை நல்கியவர்! - வெல்லுதமிழ் அண்ணல் மறைந்திட்டார்! ஐயகோ! அன்பருளக் கண்ணீர்க் கடலெனக் காண்! ஓங்கும் தமிழணிக்கே ஒப்பில் தலைமையினைத் தாங்கும் மறவர் தமிழண்ணல்! - ஈங்கெழா நீடுதுயில் கொண்டதுமேன்? ஐயோ!தன் நெஞ்சுடைந்து பாடுகுயில் தேடும் பறந்து!

கவிதை

தாய்க்கொரு மடல்

எஜமானின் வீட்டு கனவான்களுக்கு சமைத்துத்தான் கொடுக்கின்றேன் வயிற்றுப் பசியாற்றவும் உடற் பசியாற்றவும் என்னைத்தான் நாடுகின்றான் ஒருவன் மாறி ஒருவன்! செத்துப்போன உடலுக்குள்ளே ஒரு குற்றுயிராய் வாடுகின்றேன் கலங்கிவிடாதே தாயே...!

கவிதை

புகலிடம் தாராயோ?

உலவும் தென்றல் குளிரெனவே - என் உள்ளச் சோலையில் பூத்தவளே! இலவு காத்த கிளிபோல எனை ஏங்க வைத்தே சென்ற தெங்கே? பிரிவென் கின்ற புயற்கரத்தால் - உயர் பாசச் சுடரை அணைத்துவிட்டுச் சருகாய் என்றன் வாழ்வதனைத் - தரையில் சரியச் செய்தே சென்றதெங்கே?

கவிதை

மனதில் ஒரு கீறல்!

நேற்றைய சத்தமோ, நிசப்த நிலையில் நேரும் என்று கொஞ்சமும் நினைத்தும் பார்க்காது; நேசத்தின் தோற்றம் வெறும் ஏமாற்றமாக நேர கால மாற்றத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியானது ஆசைகள் ஒவ்வொன்றும் ஆற்றோடு அடியுண்டு ஆதரவு தேடிய வெளிச்சமும் அணைந்து இருட்டில் ஆழமும் அறியாமல், போகும் திசையும் தெரியாமல் ஆரவாரம் எல்லாமே அடங்கி ஒடுங்கிய நிலையில் வேண்டும் காட்சிகளை மாற்ற வழி தெரியவில்லையே ...

கவிதை

மனசாட்சி

மனசாட்சியை இழப்பதும் இல்லாமல் செய்வதும் மானிலத்தை அவமதிப்பதாகும்... மனித புலத்திற்குள், வனவிலங்குகள் வாசம் செய்வதாக! மனசாட்சியைக் கொன்று வாழ்தலென்பது, காலமுனை சிரச்சேதம் செய்யும் தருணமாகிவிடும்!

கதை

உறங்கும் உண்மைகள்

‘ஏன் சாமியாரே ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கக் கூடாதா? ஊடனேயே காதல் கடிதம் எழுதுவதா? இப்போது காதலிப்பார்கள். பின்பு பெற்றோர் சம்மதிக்கவில்லை. சீதனம் வேண்டும் என்று கூறிவிடுவர். காதலாவது கத்தரிக்காயாவது? ஆனானப்பட்ட இராமனே சீதையை நெருப்பில் குதிக்கச் சொன்னவர் தானே? மனைவியைப் பணயப் பொருளாக வைத்து சூதாடி அரசவையில் சேலையை உரியும்போது மௌனமாயிருந்தவர் தருமபுத்திரர்..’ என்பாள். மைதிலியின் வார்த்தைகளைக் கேட்ட சந்திரன் தன் காதலை மனதுக்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டார். பின்பு இருவரும் சகஜமாகப் பழகினார்கள். அவர் பட்டயக் கணக்காளராக பதவி பெற்றார். மைதிலி ஒரு ஆசிரியராகி, வேறு ஊரில் உள்ள பாடசாலைக்குச் சென்றுவிட்டாள்.

கதை

பரீட்சை நேரம்…

நாளைக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் எனக்கு, லைபிரரில புத்தகத்தோட சண்டை போட்டுக்கொண்டிருந்தன். எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்தபழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை.. இப்போது முயற்சியே செய்வதில்லை.

 » Read more about: பரீட்சை நேரம்…  »

By விஷ்ணு, ago
கதை

என்மேல் விழுந்த உளி

“கணக்கு ஆசிரியர் விஷயத்தில் நீ சந்தோஷப் படவேண்டும் என்றேன். எத்தனையோபேர் மீது அக்கறை எடுத்துகொள்ளாத பல ஆசிரியர்கள் உள்ளபோது உன் மீது அக்கறை எடுத்துக்கொள்ளும் கணக்கு ஆசிரியரை நீ பாரட்ட வேண்டும். அவர் உன்னை யார் என்று தெரிந்திருக்கிறார் உன்னை கேள்வி கேட்பதன் மூலம் உனது முன்னேற்றத்தை கவனிக்கிறார் என்று அர்த்தம். இப்படி ஒரு நல்ல ஆசிரியர் இருக்கும்போது நீ கவலைப் படவேண்டாம். அதிக நேரம் எடுத்து பயிற்சி செய் முயற்சி செய்தவன் தோற்றதில்லை. ஆசிரியர் சொல்லும் எதையும் நேர்மறையாக எடுத்தக்கொள் “ என்று சொல்லிவைத்தேன். நாராயணனுக்கு புரிந்ததோ இல்லையோ நான் ஒரு நம்பிக்கையை அவனுள் விதைத்தாகவே எண்ணினேன்.

உருவகம்

பிள்ளையாரும் பீட்டர் ஜோன்சும்

வேகமாக தன் சாப்பாட்டுக்கூடைக்குள் கையை விட்டு துழாவிக்கொண்டே “நான் இங்க ப்ரேயர் பண்ண வரல” என்று தீர்க்கமாக சொன்னவன் டிபன் பாக்சை வெளியிலெடுத்து மெதுவாக தன் பல் இடுக்கில் வைத்து நெம்பி அதிலிருந்து சில பருக்கைகளைக் கையிலெடுத்து அந்த பிள்ளையார் சிலையைச் சுற்றி இருந்த சின்னச் சின்ன எறும்புப் புற்றுகளுக்கு முன் வைத்துவிட்டு மீண்டும் மாமியிடம் சொன்னான் “கலை இங்க தினமும் சாப்பாடு வைப்பான், இன்னைக்கு வைக்காம விட்டா எறும்பு பாவம்தான? பசிக்குமே,..அதுக்குதான் வந்தேன்”.

நேர்காணல்

எழிலரசியைப் பாடிய எழில்வேந்தன்

அன்னை தெரசா அவர்களை கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு துறவி என்று மட்டுமே பார்ப்பவர்கள் உண்டு. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை என்பதுதான் அவரது நோக்கமாக இருந்ததே அன்றி, மதம் மாற்ற வேண்டும் என்ற குறுகிய நோக்கில் அமைந்ததே இல்லை. அவர், தன் வாழ் நாளில் எவரையும் மதம் மாற்றவில்லை, அது தன் நோக்கமும் அல்ல என்பதை பல முறை தெளிவுபடுத்தியும் இருக்கிறார். “மனிதர்களை மனித நேயம் உள்ளவர்களாக மாற்றிட வேண்டியதுதான் முக்கியம்” என்று அவர் சொல்லி இருக்கிறார். அவரது சேவையைப் பெற்றவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே. அவர் சேவையைத் தொடங்குவதற்கு அரசால் ஒதுக்கப்பட்ட இடம் இராமகிருஷ்ண பரமஹம்சர் பணியாற்றிய கோயிலின் மிக அருகாமையில்தான் அமைந்திருந்தது.