கவிதை
மனதில் ஒரு கீறல்!
நேற்றைய சத்தமோ, நிசப்த நிலையில் நேரும் என்று கொஞ்சமும் நினைத்தும் பார்க்காது; நேசத்தின் தோற்றம் வெறும் ஏமாற்றமாக நேர கால மாற்றத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியானது ஆசைகள் ஒவ்வொன்றும் ஆற்றோடு அடியுண்டு ஆதரவு தேடிய வெளிச்சமும் அணைந்து இருட்டில் ஆழமும் அறியாமல், போகும் திசையும் தெரியாமல் ஆரவாரம் எல்லாமே அடங்கி ஒடுங்கிய நிலையில் வேண்டும் காட்சிகளை மாற்ற வழி தெரியவில்லையே ...