கவிதை
காலம் வரும்வரை காத்திருப்பாய் …
கன்னத்து குழியழகு கார்மேக முடியழகு வண்ணத்தில் நீ இருக்காய் வானழகு வடிவமடி. எண்ணத்தில் நீ இருக்காய் ஜென்மத்தில் நீ வாழ்வாய்! வில்லழகு நெற்றியிலே பொட்டழகு மின்னுதடி வட்டமிட்ட உன்முகம் பூ அழகு புன்னகையும் எனைக் கிரங்கச் செய்யுதடி!