மங்காப் புகழினை மனதில் இருத்திடும்
மாண்புடைச் செல்வமாம் மருமகள்  – வளம்
தங்கும்  நிலைதனைத் தந்தே  நிறுத்திடும்
தகைமை பொருந்திய திருமகள் !

எல்லோர்  உறவிலும் இருக்கும்  அன்பினை
இணைத்துக் கொடுப்பவள்  மருமகள்  – நாளை
நல்லோர் பரம்பரை நானிலம்  போற்றவே
நாளும் உழைத்திடும் பெருமகள் ! 

மாமியார் உறவினை தாயேன ஏற்றிடும்
மக்களில் இன்னுமோர் மகளவள்! – சீதனம்
சுமந்தவள் புக்ககம் வருகையில் அகந்தையை
செருப்பென மாற்றிடும்நல் குணத்தவள்!

சுட்டிடும் வார்த்தைகள் மனதெல்லாம் எரித்தினும்
சோகத்தை மறைத்துமே சிரிப்பாள் – கன்னம்
வழிந்திடும் நீரினில் காயங்கள் போக்கிடும்
வல்லமை படைத்துமே இருப்பாள் !

பாரங்கள் யாவையும் பூவேன மாற்றிடும்
பசுந்தளிர் மருமகள் என்பவள் – தினம்
வரம்தரும் தேவதை தலைமகள் என்று
வாழ்த்திடத் தகுதியாய் நிற்பவள் !

கத்தியாய் மாறியே இழிவுகள் யாதையும்
வெட்டியே வீழ்த்துவாள்  வென்றிட  –  தன்
குடும்பத்தின் காவலைக் குன்றாமல் ஏற்பாள்
குலக்கொடி மருமகள் என்றிட !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.