என்னங்க … ?

கணவனை பார்த்து”என்னங்க” என்று மனைவி அழைத்தால், அந்த வார்த்தையில் பல அர்த்தங்கள் அடங்கும். திருமணம் செய்த ஆண்களுக்கு மட்டுமே அது புரியும். பாத்ரூமில் இருந்து ‘என்னங்க’ என்று மனைவி அழைத்தால், “பல்லி அடிக்க கூப்புடுறா”னு அர்த்தம். வீட்டு வாசலில் நின்று நண்பனுடம் பேசிக் கொண்டிருக்கும் போது ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “மரியாதையா உள்ள வாறியா இல்ல கதவ சாத்தட்டா”னு அர்த்தம். கல்யாண வீட்டில் ‘என்னங்க’ என்று சத்தம் கேட்டால் Read more

நல்லதங்காள் வரலாறு

நல்லதம்பி, நல்லதங்காள் அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்ல தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த போதிலும், அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த Read more

கர்வம் வேண்டாமே …

பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டிணத்தார் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் பட்டிணத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார். “இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்,” என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தினார். சற்று யோசித்த பட்டிணதார் “ரொம்ப நல்லது. அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே!” என்று கேட்டார். Read more

மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!

இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.

ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.

மூங்கில் அரிசி பற்றி தெரியுமா உங்களுக்கு

மூங்கில் அரிசி:
மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்.