p299405கணவனை பார்த்து”என்னங்க” என்று மனைவி அழைத்தால், அந்த வார்த்தையில் பல அர்த்தங்கள் அடங்கும். திருமணம் செய்த ஆண்களுக்கு மட்டுமே அது புரியும்.

  • பாத்ரூமில் இருந்து ‘என்னங்க’ என்று மனைவி அழைத்தால், “பல்லி அடிக்க கூப்புடுறா”னு அர்த்தம்.
  • வீட்டு வாசலில் நின்று நண்பனுடம் பேசிக் கொண்டிருக்கும் போது ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “மரியாதையா உள்ள வாறியா இல்ல கதவ சாத்தட்டா”னு அர்த்தம்.
  • கல்யாண வீட்டில் ‘என்னங்க’ என்று சத்தம் கேட்டால் “என் சொந்தக்காரங்க வந்திருக்காங்க, சீக்கிரம் வாங்க”னு அர்த்தம்.
  • ஹோட்டலில் சாப்பிட்டு முடித்தபின் ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “சீக்கிரம் பில்ல கட்டீட்டு வா”னு அர்த்தம்.
  • மனைவியுடன் பைக்கில் போகும்போது ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “பூக்கடை வருது, வண்டிய நிப்பாட்டு”னு அர்த்தம்.
  • ஜவுளி கடையில் நின்று ‘என்னங்க’ என்று அழைப்பு கேட்டால் “நான் தேடிட்டு இருந்த புடவை கிடச்சிடுச்சு. பில் போடணும் சீக்கிரம் வாங்க”னு அர்த்தம்.
  • வீட்டில் பீரோ முன்னாடி நின்றுகொண்டு ‘என்னங்க’ என்று மனைவி ஆசையோடு அழைத்தால் “மவனே இன்னக்கி உன் பர்ஸ்ஸ காலி பன்றேன்டா”னு அர்த்தம்.
  • தட்டுல சோறு போட்டுட்டு ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “சோறு போட்டாச்சு. வந்து வயிர் நிறைய கொட்டிக்கோ”னு அர்த்தம்.
  • பக்கத்து வீட்டு சண்டையில் நாம தலையிடும் போது ‘என்னங்க’ என்று மனைவியின் சப்தம் வேகமாக கேட்டால் “உன் வேலைய பாத்துக்கு போ. தேவையில்லாத பிரச்சனைல நீ மூக்க நுழைக்காதே”னு அர்த்தம்.
  • நைட்டு தூங்குவதற்கு முன் ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “மொபைல்ல நோன்டியது போதும். மரியாதையா போனை வச்சுட்டு தூங்கு”னு அர்த்தம்.

இப்படி பல அர்தங்களை உள்ளடக்கி கொண்டது தான் “என்னங்க”.

“என்னங்க” என்பது வார்த்தையல்ல,
அது ஆண்களின் “வாழ்க்கை”.!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »