கவிதை

நெருடல்

மனது நம்மை மயக்கும் மாயை; தனது என்று தாவும் பாவை. பிணக்கு கொண்டு பிதற்றும் சாது; கணக்கு உண்டு காணும் போது. நினைப்பதை அடைய நீண்டு வளரும்; வினைப்பயன் கண்டு வெம்பித் தளரும். அணையாய் நின்று அறமாய் வாழும்; கனையாய் வந்த கவர்ச்சியில் வீழும்.