jodiஎனக்குள் நீ …!
உனக்குள் நான் ..
இருவருமே வாழ்வில் ..
இரண்டறக் கலந்திருக்க ..
இடையிலெதற்கு இடர்கள் ..!

எனக்கு நீ ஆடை ..!
உனக்கு நான் ஆடை ..
இருவருமே ஓராடை ..இது
இறைவனின் தீர்ப்பாணையே ..!
இந்த உண்மையில் சுகம்தானே ..!

கணவன் மனைவியாய்
கரம்பிடித்தோம் களிப்பாகி !
காலத்தின் நகர்விலே ..
கைவிரிக்கோம் வெறுப்பாகி ..!
கசந்து போன வாழ்க்கையாய் !
கண்களில் தெரிவதேனோ .. இன்று
கண்ணீரில் நனைந்து நின்று ..
காவியம் வரைவதேனோ ..?

உள்ளத்தின் ஒவ்வாமை வாழ்வின்
உணர்வுகளை சிறையடைக்கும் ..
எண்ணமோ ஐயுறவானால் வாழ்வோ !
எரித்திடும் அனலியாய் மாறும் ..!

சந்தேகச் சகதியில் நீ
சறுக்கி விழுந்திடாதே !
சகதி சரியாகிவிடும். .
சந்தேகமோ .. வாழ்வை ..
சருகாக்கி விடும் ..!
உள்ளங்கள் இணைவதால் !
உணர்வுகள் உயிர்பெரும் ..
கன்னம் சிவந்திட வாழ்வில்
களிப்பும் வளம்பெறும் ..!

வீழ்ந்து எழுவோம் கணவனிடம் ..!
விட்டுக் கொடுப்போம் மனைவியிடம்
தட்டிக் கொடுப்போம் இருவருமே !
தரணி போற்றும் எம் வாழ்வுதனை ..!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...