jodiஎனக்குள் நீ …!
உனக்குள் நான் ..
இருவருமே வாழ்வில் ..
இரண்டறக் கலந்திருக்க ..
இடையிலெதற்கு இடர்கள் ..!

எனக்கு நீ ஆடை ..!
உனக்கு நான் ஆடை ..
இருவருமே ஓராடை ..இது
இறைவனின் தீர்ப்பாணையே ..!
இந்த உண்மையில் சுகம்தானே ..!

கணவன் மனைவியாய்
கரம்பிடித்தோம் களிப்பாகி !
காலத்தின் நகர்விலே ..
கைவிரிக்கோம் வெறுப்பாகி ..!
கசந்து போன வாழ்க்கையாய் !
கண்களில் தெரிவதேனோ .. இன்று
கண்ணீரில் நனைந்து நின்று ..
காவியம் வரைவதேனோ ..?

உள்ளத்தின் ஒவ்வாமை வாழ்வின்
உணர்வுகளை சிறையடைக்கும் ..
எண்ணமோ ஐயுறவானால் வாழ்வோ !
எரித்திடும் அனலியாய் மாறும் ..!

சந்தேகச் சகதியில் நீ
சறுக்கி விழுந்திடாதே !
சகதி சரியாகிவிடும். .
சந்தேகமோ .. வாழ்வை ..
சருகாக்கி விடும் ..!
உள்ளங்கள் இணைவதால் !
உணர்வுகள் உயிர்பெரும் ..
கன்னம் சிவந்திட வாழ்வில்
களிப்பும் வளம்பெறும் ..!

வீழ்ந்து எழுவோம் கணவனிடம் ..!
விட்டுக் கொடுப்போம் மனைவியிடம்
தட்டிக் கொடுப்போம் இருவருமே !
தரணி போற்றும் எம் வாழ்வுதனை ..!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.