siimaatti
அகவிளக்கில் மலர்ந்தவளே
அகம் முழுதும் எரிகின்றாய்
உடல்முழுதும் நீ இருக்காய்
உயிரனுவாய் நீ வருவாய்!

தித்திக்கும் உன் நினைவு
திகட்டாத உன் மேனி
பட்டத்து பால் நிலவும்,
வெட்கி தலை குனியும்
உன் நிறத்தில்!

கன்னத்து குழியழகு
கார்மேக முடியழகு
வண்ணத்தில் நீ இருக்காய்
வானழகு வடிவமடி.
எண்ணத்தில் நீ இருக்காய்
ஜென்மத்தில் நீ வாழ்வாய்!

வில்லழகு நெற்றியிலே
பொட்டழகு மின்னுதடி
வட்டமிட்ட உன்முகம்
பூ அழகு புன்னகையும்
எனைக் கிரங்கச் செய்யுதடி!

ஆண்டுகள் பல கடந்தடி
எண்ணற்ற குறுஞ்செய்தி
கைபேசி சேர்ப்பகமும்
உன் நினைவை சொல்லுமடி!

கவி எல்லாம் நான் எழுத
காதலர் தினமும் வந்ததடி
காலமெல்லாம் காத்திருப்பேன்
சீமாட்டி நான் உன் அருகில்
நான் இருக்க வேண்டுமடி!

கவிஞர் த.ரூபன்
திருகோணமலை – இலங்கை


1 Comment

கவிஞர் த.ரூபன் · பிப்ரவரி 12, 2016 at 18 h 02 min

கவிதையை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.