சிறுகதை

தண்டவாளத்தில் ஓர் உயிர்

அது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் போகிற பாசஞ்சர் ரயில். அந்த ரயிலோட டிரைவர் ஜான்சன்மற்றும் டீசல் அஸிஸ்ட்டண்ட் அழகர் எஞ்சினிலி ருந்தார்கள். அது மதுரையில் 7மணி அளவில் கிளம்பி 12 மணிஅளவில் ராமேஸ்வரம் சென்றடையும்.

 » Read more about: தண்டவாளத்தில் ஓர் உயிர்  »

புதுக் கவிதை

காடுகள்

காடுகள் – நம்
வாழ்விடத்தின் கடைகால்கள்
ஆனால்… நாம்
தகர்த்துக் கொண்டிருக்கிறோம்.

காடுகள் – நம்
உயிர்வளி சேமிப்பகங்கள்
ஆனால்… நாம்
செலவழித்து கொண்டிருக்கிறோம்.

 » Read more about: காடுகள்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 15

15

இப்ப, நாம நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. தானே..?’ என்றாள் சக்தி…

‘ஆம்..! இந்த பொதிகை மலையும், மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி.தான்..!’ சக்தி…

‘சரி, நேரம் ஆச்சு..! 

 » Read more about: யாளியும்… சக்தியும்… 15  »

கவிதை

மே தினம்

விடையைத் தேடி விடியலைத் தேடி
…… வாடிடும் ஏழைகள் வாழ்வினைப் பார்.!
விரைவாய் வந்ததோ மே தினமும்
…… விடிவினை வேண்டுதே நம் மனமே.!

உழைப்பவர் போற்றி உயர்வு பெற
…உலகம் போற்றும் இத் தினமே.!

 » Read more about: மே தினம்  »

கவிதை

உரிமைத் திருநாள்!

மேதினம்!
உழைப்பால் பூத்த
மலர்வனம்!

வியர்வை முத்து!
வென்ற
புகழ்ச்சொத்து!

பாடுபடும் பாட்டாளி
பட்ட தொல்லை – நீக்கிப்
பழுத்த கொல்லை!

 » Read more about: உரிமைத் திருநாள்!  »

கவிதை

உழைக்கும் கைகள்

உழைக்கும் கைகள்
—— உண்மையின் வேர்கள் – இவை
தழைத்தல் இல்லா
—— சருகு இலைகள்.

உலகை உயர்த்த
—— உதித்த மலர்கள் – இவை
உலகோர் உண்ண
——

 » Read more about: உழைக்கும் கைகள்  »

புதுக் கவிதை

என்னில் கோபுரக் கலசமாய்

உன் விழியில் விழுந்த நொடி
என்னிதயத்துள் காதல் வேர்விட்டதடி
உன் ஒற்றைப் பார்வையில் மனம்
பித்தாகி நான் மயங்க
தூக்கம் தொலைத்த கண்கள் தூர்ந்தே போனதடி
நெற்றிப் புரளுமுந்தன் கற்றைக் குழலினில்
தூளி கட்டியாடத் துடிக்குதெந்தன் மனது.

 » Read more about: என்னில் கோபுரக் கலசமாய்  »

தன்முனை

மலர்வனம் 6

தன்முனை

ஜென்ஸி

நெஞ்சொடு கிளத்தல்

புத்தக அந்தாதி

1.
சிரிக்க. வைத்தவர்களை
மறந்து விட்டு
அழ. வைத்தவர்களை – ஏன்
நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?

 » Read more about: மலர்வனம் 6  »

By Admin, ago