புதுக் கவிதை

காம, மதவெறி பிடித்த கயவன்களே!

காம, மதவெறி பிடித்த
கயவன்களே!

எதை நீ
தேடினாய் -அந்த
எட்டு அகவை
அசிஃபாவிடம்

நீ தூங்க
அவள் தூங்காமல்
இரவு முழுவதும்
உன்னை சாய்த்து
வைத்திருந்த
அந்தத் தோள்களையா?

 » Read more about: காம, மதவெறி பிடித்த கயவன்களே!  »

புதுக் கவிதை

மண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில்

விளக்கொளியில் மறைந்திருக்கும்
மையிருட்டில் பொலிவிழந்த முகங்களின்
அடையாளங்கள் நிலைத்திருக்கும்!
தெளிவற்ற சிந்தனைக்குள்
செயல்பாட்டின் விரல்கள் எல்லாம்
முடங்கியிருக்கும்!
ஒன்று கூடிப் பேசினாலும்
முடிவற்ற சூழலுக்குள்
பொய்மையும் புறங்கூறலும்
மண்டிக்கிடக்கும்!

 » Read more about: மண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில்  »

புதுக் கவிதை

யாராவது தூண்டிலோடு வருவார்களா?

ஒரு ஜன்னலின்
கதவொன்றில் தெரிகிறது
அவளின் நிழலாடும்
உருவம்…

இரவுநேர வெப்பச் சலனத்தில்
கிணற்று நீரில்
எத்தனை முறை குளிப்பது
சலித்துக்கொள்ள முடியாத
உடல்சூட்டில் தணியாத
பெண்மையின் படைப்பு

பகலில் கூட தூங்கமுடியாது
இனம்புரியாத கனவுகளை
ஏற்க மறுத்தாலும்
பருவத்தின் பிடிக்குள்
சிக்கித் தவிக்கவே செய்கிறது
மனத்தின் கெண்டைகள்

மீண்டும் ஜன்னலின்
கதவிடுக்கில் பார்த்துக் கொண்டே
விம்முகிறாள்…

 » Read more about: யாராவது தூண்டிலோடு வருவார்களா?  »

புதுக் கவிதை

விதைக்க மறந்த மனித நேயம்

1.
எந்தேசம் எங்கேபோ கிறது சொல்லு
… இழிநோக்கி நகரத்தான் மனிதம் என்றா
சந்தையென கல்வியாகி திருட்டுக் கொள்ளை
… சாதிமத சண்டைகளும் மனிதம் கொல்ல
எந்ததிசை போகிறது மக்கள் கூட்டம்

 » Read more about: விதைக்க மறந்த மனித நேயம்  »

கவிதை

பாதமே வேதம்

உந்தன் பாதம்
எந்தன் வேதம்,
உந்தன் கொலுசு
எந்தன் இன்னிசை.

ஆடும் கால்கள்
ஆனந்த ஊற்று,
ஓடும் பரல்கள்
உயிரின் ஓசை,

வண்ணப் பூச்சு
வடிவின் வீச்சு,

 » Read more about: பாதமே வேதம்  »

புதுக் கவிதை

வீடுபேறு உடைய வீடு

கிளைகள் அடர்ந்த தனிமரம்தான் அது
தன் விழுதுகளை நம்பியே
நிமிர்ந்து நிற்கும் அரைநூற்றாண்டாக …

அதன்கிளைகள் மேல் பசிய இலைகளாகப் படர்ந்தன கிளிகள்…
லட்சோபலட்சம் பைங்கிளிகளின்
ஆராவாரிக்கும் சப்தம் எண்திசையெங்கும் பறக்கச் செய்கிறது.

 » Read more about: வீடுபேறு உடைய வீடு  »

குடும்பம்

சிறுவர்கள் உலகம்

சிறுவர்கள் உலகம் புது உலகம் – பெரும்
சாதனை படைக்கும் தனி உலகம்
வறுமையின் துயரம் உடன் விலகும் – புது
வசந்தங்கள் தந்தே பூ மலரும்!

இது மழலைகள் பருவம்
சின்ன நிலவுகள் உருவம் – என்றும்
பாழ் நிலவாய்ப் பாரில் தாவி ஒளி கொடுப்போமே…

 » Read more about: சிறுவர்கள் உலகம்  »

புதுக் கவிதை

ரோஹிங்காஒரு கண்ணீர்க் காவியம்

 

கண் வலிக்கும் ரோஹிங்காவின் காட்சி பல கண்டு
கவி வரைந்தேன் என் மனதில் ஆற்றாமை கொண்டு
புண் முளைக்கும் இதயத்தில் மக்கள் துயர் எண்ணி
புகலிடத் திலும் பருக இல்லைத் துளித் தண்ணி
விண் முழக்கம் போல் விழுதே வெடியெறி குண்டு
விலை மதிக்க முடியாத உயிர் பல கொன்று
மண்ணறைக்குள் புதைக்கவில்லை தீயினிலே இட்டு
மனித ரத்தம் குடிக்கின்றார் மக்களினைச் சுட்டு!

 » Read more about: ரோஹிங்காஒரு கண்ணீர்க் காவியம்  »

புதுக் கவிதை

தன்னம்பிக்கை

துளைக்கப் பட்டோமென்று
துவளவில்லை மூங்கில்கள்!
மாலையில் வீழ்வோமென்று
மலராமல் இல்லைமலர்கள்!

வீழ்ந்து விட்டோமென்று
விருட்சம் ஆகாமலில்லை விதைகள்!
சிதைக்கப் பட்டோமென்று
சிலைகள் ஆகாமலில்லை
பாறைகள்!

 » Read more about: தன்னம்பிக்கை  »

புதுக் கவிதை

கருகி மியன்மார் நாறட்டும்

கடும் போக்கான கயவர்கள் எல்லாம்
கருகி மியன்மார் நாறட்டும்

பால் மணம் மாறாப்
பாலகிப் பூவே !
பர்மா அழிவது நிச்சயண்டா
பாவிகள் ஆணவம்
பாரில் நிலைக்கா
படைத்தவன் மேலே சத்தியண்டா!

 » Read more about: கருகி மியன்மார் நாறட்டும்  »