மனப் பெயர்வு

வாடகை வீட்டில் வாழ்க்கையைக் கடத்தியது போதுமென அடுக்ககத்தின் புது மனையில் நுழையும் ஆயத்தப் பணியில் அனைத்தும் எடுத்து வைத்தாயிற்று ஏதேனும் மறந்துவிட்டோமா என ஒவ்வோர் இடமாய் கண்களால் துழாவும் வேளை வாங்கியதில் இருந்து பூக்காமல் ஏங்கவைத்த அந்தச் சாமந்திப் பூச்செடி அன்றுதான் மொட்டு விட்டிருந்தது

காம, மதவெறி பிடித்த கயவன்களே!

காம, மதவெறி பிடித்த கயவன்களே! எதை நீ தேடினாய் -அந்த எட்டு அகவை அசிஃபாவிடம் நீ தூங்க அவள் தூங்காமல் இரவு முழுவதும் உன்னை சாய்த்து வைத்திருந்த அந்தத் தோள்களையா? உன் பசி தீர்க்க பால் கொடுத்த அந்த மார்பகங்களையா? நீ கருவில் உருவான செய்தி கேட்டு அன்போடு உன்னைத் தடவிப்பார்த்த அந்த வயிற்றையா? தலையணையாக மடி தந்த அந்தத் தொடைகளையா? அடுப்பங்கரையிலேயே ஓய்வின்றி சுழன்று கொண்டிருக்கும் அவள் கால்களையா? Read more