உந்தன் பாதம்
எந்தன் வேதம்,
உந்தன் கொலுசு
எந்தன் இன்னிசை.

ஆடும் கால்கள்
ஆனந்த ஊற்று,
ஓடும் பரல்கள்
உயிரின் ஓசை,

வண்ணப் பூச்சு
வடிவின் வீச்சு,
மின்னிடும் மெட்டி
மனதின் பேச்சு,

வெள்ளிக் கொலுசு
அள்ளுது மனசை,
துள்ளும் அதனின்
துடிக்கும் ஓசை,

வெல்லும் இசையிடம்
வெஞ்சமர் புரியும்.
பாதம் மட்டுமே
பார்க்கப் போதும்,

குளிர்ந்த பாதம்
கோபுர அடித்தளம்,
மிளிறும் விரல்கள்
மின்மினிப் பூச்சிகள்.

சிவந்தத் தாள்கள்
செவ்வியக் கவிதை.
அவையிடம் இருந்தே
அதிசயம் பிறக்கும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.