1.
எந்தேசம் எங்கேபோ கிறது சொல்லு
… இழிநோக்கி நகரத்தான் மனிதம் என்றா
சந்தையென கல்வியாகி திருட்டுக் கொள்ளை
… சாதிமத சண்டைகளும் மனிதம் கொல்ல
எந்ததிசை போகிறது மக்கள் கூட்டம்
… ஏனிந்த மிருகத்தோல் மனிதன் போட்டான்
வந்துதிக்கும் சூரியனும் மதங்கள் சாதி
… மனிதனிலே பார்த்துதானோ இனியும் தோன்றும்?

2.
உடன்பிறந்து வாழ்ந்துவரும் உனது ரத்தம்
… ஊண்தின்னி யென்றான வேங்கை யர்கள்
தடம்பதிக்க அறிவுகொள்ள கல்வி உண்டு
… சாக்கடையில் கரைத்துவிட்டான் கற்ற யெல்லாம்
வடம்பிடித்து இழுப்பாரோ இனியும் நாட்டை
… வளங்காண மனிதநேயம் பெருகி யோட
குடங்குடமாய் அழுதாலும் தீர்ப்பார் யாரோ
… குறைகளைய யார்தானோ உதயம் இங்கே.

3.
பிறப்பிற்கு வேதனைகள் அளவில் லாமல்
… பீய்த்திறிந்து உயிர்பிக்க கடவுள் இல்லை!
இறப்பிற்கு போராடும் உயிரில் கூட
… இலாபத்தை ஈட்டிடவே திருட்டு வேலை!
உறவாகி யிருந்திருந்தால் உயிரும் வேகும்
… ஊராரின் மேலேது நலனும் காக்க
சிறகுக்கு இறகுகளே மூலம் என்ப
… சிறக்கத்தான் மனிதனுக்கு என்ன உண்டு.

4.
பிணத்தோடும் சுகந்தேடும் ஈன னானாய்
… பேய்க்குணத்தால் மகளைகூட தார மென்றாய்
பணத்திற்கு பின்னாலே ஓடும் நீயோ
… பாவங்கள் செய்திடவே பாவி யானாய்
குணங்கொன்றார்க் கிவ்வுலகில் இடமும் உண்டோ
… குற்றத்தால் அவ்வுலகில் தீர்ப்பும் உண்டே
வணங்காத மனங்கூட வளையும் பாராய்
… வருவதெல்லாம் தன்சதைக்கென் றபோது வாடும்

5.
தானங்கள் தருமங்கள்செய்யும் கைகள்
… சாட்சியங்க ளில்லாதே செய்யும் காணாய்
வானம்போல் உயர்ந்துநிற்பர் மானங் காத்து
… மாட்சிமையில் செறிந்தவரே நல்லார் என்பர்
போனவர்கள் போக்கற்று போவார் எல்லாம்
… பூமிக்கு பாரமென்றார் நல்லோர் அன்று
மானமற்று கேவளமாய் உலகில் வாழ
… மாக்களாகி போனவர்கள் நீங்கள் என்பேன்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்