விடுபடுதல்

சிலவேளைகளில் கற்பனைகள் உண்மைகளைவிட உன்னதமானவை நான் வகுப்பறைக்குள் நுழைந்தேன் பெஞ்சுகளில் பேசாமல் அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சிகள் வணக்கம் சொல்லின கட்டிப்போட்டு பாடம் நடத்தினால் பட்டுப்போய்விடுமென யோசித்தேன் அவற்றின் படபடக்கும் கண்கள் வானுக்கு அழைத்துப் போகச் சொல்லின பறக்கத் தொடங்கினோம் கிறக்கமுற்ற வானம் கைகுலுக்கி வரவேற்றது வானத்தின் வகுப்பில் கணக்குப் பாடம் நட்சத்திரங்களை எண்ணச் சொன்னேன் பறித்துக் கோர்த்து மாலையாக்கி மகிழ்ந்தனர் விடுதலை பற்றிய பாடத்தில் கூண்டுக்குள் வேண்டாமென காற்றிடம் பெருவெளி கேட்டோம் Read more

சொள்ளை

கடல் அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தது. கொஞ்சம் சிணுங்கலுடன் சேலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு கரை வந்தாள். கடல்மணலில் உக்காந்திருந்த கட்டுமரத்தில் அவள் உக்காந்தாள். திரும்ப கடலை வெறித்தாள். இந்தக் கடல்தானே தன் வாழ்வைப் புரட்டிப் போட்டது. நிலைகுலையச் செய்தது. என்றாலும் அவளுக்கு ஏனோ அதன்மீது கோபம் வரவில்லை. இன்று ஏனோ புதுவிதமான உணர்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து நின்றான் கதிர். இவன் தன் பழைய காதலைச் Read more

வீடுபேறு உடைய வீடு

கிளைகள் அடர்ந்த தனிமரம்தான் அது தன் விழுதுகளை நம்பியே நிமிர்ந்து நிற்கும் அரைநூற்றாண்டாக … அதன்கிளைகள் மேல் பசிய இலைகளாகப் படர்ந்தன கிளிகள்… லட்சோபலட்சம் பைங்கிளிகளின் ஆராவாரிக்கும் சப்தம் எண்திசையெங்கும் பறக்கச் செய்கிறது. கிளிகளின் கொஞ்சல்களும் பழங்களைக் கொத்தியுண்ணும் இன்பமும் தாய்வயிற்றில் உதைக்கும்குழந்தையெனக் கொள்கிறது அந்த ஆலமரம் நாற்புறமும் சாலைகளை சத்தமிட்டபடியே குறுவண்டி பெருவண்டிகளெனப் பெருகியோடும் பேராற்றின் நடுவே அது செம்மாந்து நிற்பதை பார்த்தவர்கள்… சிலர் புரியாமல் உமிழ்ந்து போகிறார்கள் Read more

தூக்கம் தொலைத்த இரவுகள்

கடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது? என உங்களுக்கு நினைவிருக்கிறதா? கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா? 8:00 மணிக்குள் இரவு உணவு முடித்து, 8:30-க்கு வெளிச்சம் அணைத்து, பேசிக்கொண்டே படுக்கையில் விழுந்தால், 9 மணிக்குள் உறங்கிப்போவோம். அது ஒரு காலம். 9 மணித் தூக்கம் என்பது, 10 மணியாகி, நள்ளிரவாகி, Read more