ஒரு ஜன்னலின்
கதவொன்றில் தெரிகிறது
அவளின் நிழலாடும்
உருவம்…

இரவுநேர வெப்பச் சலனத்தில்
கிணற்று நீரில்
எத்தனை முறை குளிப்பது
சலித்துக்கொள்ள முடியாத
உடல்சூட்டில் தணியாத
பெண்மையின் படைப்பு

பகலில் கூட தூங்கமுடியாது
இனம்புரியாத கனவுகளை
ஏற்க மறுத்தாலும்
பருவத்தின் பிடிக்குள்
சிக்கித் தவிக்கவே செய்கிறது
மனத்தின் கெண்டைகள்

மீண்டும் ஜன்னலின்
கதவிடுக்கில் பார்த்துக் கொண்டே
விம்முகிறாள்…
யாராவது தூண்டிலோடு
வருவார்களா?
துன்பக் கடலின் மீது
வலைவீசி என்னை பிடிக்க!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்