சிறுவர்கள் உலகம்

சிறுவர்கள் உலகம் புது உலகம் – பெரும் சாதனை படைக்கும் தனி உலகம் வறுமையின் துயரம் உடன் விலகும் – புது வசந்தங்கள் தந்தே பூ மலரும்! இது மழலைகள் பருவம் சின்ன நிலவுகள் உருவம் – என்றும் பாழ் நிலவாய்ப் பாரில் தாவி ஒளி கொடுப்போமே… பட்டாம் பூச்சி போலே நாங்கள் சிறகடிப்போமே… பார்வை போகும் தூரம் வரை பறந்து செல்வோமே… மொட்டாய் மலர்ந்து சிட்டாய்ப் பறந்து மணம் Read more

ரோஹிங்காஒரு கண்ணீர்க் காவியம்

  கண் வலிக்கும் ரோஹிங்காவின் காட்சி பல கண்டு கவி வரைந்தேன் என் மனதில் ஆற்றாமை கொண்டு புண் முளைக்கும் இதயத்தில் மக்கள் துயர் எண்ணி புகலிடத் திலும் பருக இல்லைத் துளித் தண்ணி விண் முழக்கம் போல் விழுதே வெடியெறி குண்டு விலை மதிக்க முடியாத உயிர் பல கொன்று மண்ணறைக்குள் புதைக்கவில்லை தீயினிலே இட்டு மனித ரத்தம் குடிக்கின்றார் மக்களினைச் சுட்டு! சுட்டழிக்குஞ் சுடு குழலுந் தேமி Read more

கருகி மியன்மார் நாறட்டும்

கடும் போக்கான கயவர்கள் எல்லாம் கருகி மியன்மார் நாறட்டும் பால் மணம் மாறாப் பாலகிப் பூவே ! பர்மா அழிவது நிச்சயண்டா பாவிகள் ஆணவம் பாரில் நிலைக்கா படைத்தவன் மேலே சத்தியண்டா! கால் கை இல்லா முண்டங்களாக காற்றுப்போன உடலங்கள் கண்ணீர்ப் பெருகிக் குருதியிற் கலந்து கடல்கள் சுமக்குஞ் சடலங்கள் தோல்கள் வெள்ளை என்பதினாலோ சூசிக்கு நோபல் விருது தொட்டில் குழந்தை செய்ததா பாவம்? தோஷமே நெஞ்சிற் கருது வால் Read more

மரபும் மாற்றமும்

ஆவி யுடற் கரண மனைத்து மொன்றாகித் தாவித் தமிழோடுத் தவிழ்ந்திருப்பேன் – பூவுலகில் மாற்றக் காட்டாறு மையற்றாங் கொண்டாலுஞ் சாற்றும் மரபுக்குண்டோ சா? வாழையடி வாழை நின்று வண்ணத் தமிழாடை கொண்டு வையமுள்ள வரைக்கும் வரும் மரபு – சட்ட வரம்புகளை மீறிவிட்டா லிழிவு. பாளைமடித் தேனை வென்று பல்சுவையிஞ் சாரமுண்டு பைந்தமிழிற் புதுமை ஒன்று வரவு – திட்டப் பாதையிலே மாற்றங் கொண்ட துறவு! மாற்ற மென்றாற் புது Read more

வலைக்குள் மலர்ந்த வனப்பு

பாலமுனை பாறுக் சேர் அற்புதமான, அருமையான மனிதர். கவிதைத்துறையைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு கடல். நூலின் மீதான சிறு குறிபொன்றை கவிதை வடிவில் இங்கு வரைகிறேன் .இந்த முயற்சி மஹாகவி உருத்திர மூர்த்தி ,குறிஞ்சித் தென்னவன், பாலமுனைப் பாறூக் என்ற மூத்த மேதைகளின் நடையில் அமைந்தது. ஈழத்தின் குறும்பா, உலகுக்கு ஒரு முன் மாதிரி. அதை தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள வாசகர்கள் அறிவார்கள் . பாவேந்தல் பாறூக் சேர் Read more

கண்ணீரின் கதை கேட்க வந்தாயா?

கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? – காதல் கடலுக்குள் விழுந்தேனே அறிவாயா? பெண்ணாக பிறந்தது பெரும் பாவமா? – பேதை பிணமாகி போனேனே உன் சாபமா? தவம் இருந்தே பசிதான் மறந்தேனே – உயிர் தாய் என்னை ஈன்றதை மறந்தேனே தன்னலம் பாரா தாய்மையின் ஈரம் காய்வதற்குள் உன்னிடம் என்னை இழந்தேனே! சுய நலப் பாவி நான்தானே – இன்னும் சுழன்றது ஆவி வீண்தானே கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? Read more

தமிழில் உறைந்து போதல்

பித்தனாய் ஆனேன் பூந்தமிழே – நெறி பிறழாத கவிதைதா பொற்சிமிழே -– உன்னில் மொத்தமாய் ஆவி உடல் மோகனமாய்த் தந்த பின்னே படித்தேன் – கவி – வடித்தேன் நற்றிணையில் தமிழ் மணக்கும் பாராய் – காதல் நர்த்தனங்கள் நிலை கொள்ளும் வேராய் – கை பெற்றணையா தீபமென பேரொளியைச் சிந்துகின்ற நூலைப் – படி – காலை திருக்குறளின் ஞானப்பால் குடித்தேன் – ஒரு தினந் தவறா அதிகாரம் Read more

வாசிப்பே அறிவுக்கு வலுவூட்டும்

வாசிப்பே அறிவுக்கு வலுவூட்டும் – எங்கள் வாழ் நாளைச் சிறப்பாக்கிப் பலமூட்டும் தேசத்தின் பேரோங்க வழி காட்டும் – நிதம் தெவிட்டாத தெள்ளமுதாய்ச் சுவை மீட்டும் நேசிப்பே உள்ளத்தை நேராக்கும் – நூல் நெடுங்காலப் பேதமையைச் சீராக்கும் போசிக்கும் வாண்மையிலே ஆளாக்கும் – எம் பொடுபோக்குக் கயமைகளைத் தூளாக்கும் கருவறைக்குட் தங்குகின்ற காலந்தொட்டே – தாய்க் கட்டாயம் நன்னூற்கள் கற்றல் வேண்டும் பெருமளவி லறிவுடைமைப் பெருக்கெடுக்க – எம் பெற்றோர்கள் Read more