கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? – காதல்
கடலுக்குள் விழுந்தேனே அறிவாயா?
பெண்ணாக பிறந்தது பெரும் பாவமா? – பேதை
பிணமாகி போனேனே உன் சாபமா?

தவம் இருந்தே பசிதான் மறந்தேனே – உயிர்
தாய் என்னை ஈன்றதை மறந்தேனே
தன்னலம் பாரா தாய்மையின் ஈரம்
காய்வதற்குள் உன்னிடம் என்னை இழந்தேனே!

சுய நலப் பாவி நான்தானே – இன்னும்
சுழன்றது ஆவி வீண்தானே

கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? – காதல்
கடலுக்குள் விழுந்தேனே அறிவாயா?
பெண்ணாக பிறந்தது பெரும் பாவமா? – பேதை
பிணமாகி போனேனே உன் சாபமா?

குணம் அறியாமல் குலம் தெரியாமல் – உனைக்
கண்டதும் மின்னல் காதல் கொண்டேன்
மனம் புரியாமல் தினம் விளையாடும்
மனித குணமே உனக்கில்லை
அதற்குள் என்னை மறந்தேனே!

வாழ்க்கையில் பாதி துயர் தானோ – இனி
வேகட்டும் மீதி உயிர் உயிர் ஏனோ ?
கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? – காதல்
கடலுக்குள் விழுந்தேனே அறிவாயா?
பெண்ணாக பிறந்தது பெரும் பாவமா? – பேதை
பிணமாகி போனேனே உன் சாபமா?


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »