மரபுக் கவிதை
தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி
ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில்
—– அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல்
பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து
—– பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும்
தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த
—–
ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில்
—– அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல்
பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து
—– பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும்
தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த
—–
பாரிய மரத்தின் படர்ந்து நின்ற விழுதுகள்
நின்றன உறுதியாய் நிஜம் நாங்களென
மேலிருந்து கீழாய் ஆழமாய் பற்றிய விழுதினை
அதிசயமாய் பார்த்தது புதிதாய் முளைத்த விதை!
மலர்ந்து பூப்பூவாய் கண்மலர்
புன்னகையாய் சிமிழ் வாய் திறந்து
பிஞ்சுக் கால்களை செல்லமாய் உதைத்து
பற்றிப் பிடித்திட கைகளை அசைத்து!
படைத்தான் உன்னை கடவுள்
கிரங்க வைத்தாய் என்னை!
உன்னை
உரசிக்கொண்டு
வந்திருக்க வேண்டும்
மென்மையானது காற்று
ஜன்னல் ஓரத்தில்.
ஆழம்தான் உன்னின்
தெரியவில்லை!
இசைப்பாடல்
யே ராசா ராசா
என் நெஞ்சுக்குள்ளே
வந்து நீயும்
என்னை யென்ன
யென்ன செய்யப் போகிறாய்?
தினம் லேசா லேசா வந்து
என்னைத் தொட்டு
எங்கே நீயும் போகிறாய்?
நெல்லும் விளைஞ்சிருக்கு
நெஞ்சும் நிறைஞ்சிருக்கு!
அல்லி மலருவொன்னு
அங்கே பூத்திருக்கு!
துள்ளும் அழகிருக்கு
தூண்டில் கண்ணிருக்கு
அள்ளி அணைப்பதற்கு
ஆசை மிகுந்திருக்கு!
வரப்பு வயலோரம்
வசந்தம் அமர்ந்திருக்கு
கருப்புக் குயிலுவொன்னு
காத்துத் தவமிருக்கு!
சாமத்தில் எழுந்து
காமத்தில் நுழைந்து
மோகத்தை விதைத்தாயடா – இரு
போகத்தை அறுத்தாயடா.
வேகத்தில் மிதந்து
சோகத்தை மறந்து
தேகத்தை வதைத்தாயடா – என்
தூக்கத்தைக் கெடுத்தாயடா.
பாவேந்தர் 125ஆம் ஆண்டு விழாப் பாட்டரங்கம்
தமிழ் வணக்கம்!
தென்னாட்டு மலையேறித் தெம்மாங்கு கவிபாடித்
தேனாற்றில் நீராடும் தமிழே!
என்பாட்டுச் சிறந்தோங்க என்நாவில் நீ..யாடி
இழைத்தூட்டுத் தித்திக்கும் அமுதே!
சொத்துக்கள் சேர்ப்பதுவே வெற்றி யன்று
சொந்தங்கள் சேர்ப்பதுவும் வெற்றி யன்று
எத்தனைநாள் இப்புவியில் வாழ்ந்தோம் என்னும்
எண்ணிக்கை வெற்றியன்று வாழும் நாளில்
எத்தனைபேர் வாழ்வதற்கே உதவி செய்தோம்
என்பதுதான் வெற்றிக்குத் துலாக்கோல் தம்பி
செத்தபின்னர் இவன்போல யாருண் டென்ற
சேமிப்பே நிலையான வெற்றி யாகும்.
வேப்பமர தண் நிழலில்
உதிர்ந்த மலர் வெளிர் கம்பளம் விரிக்க
வான் சொரியும் பன்னீர் துளியால்
தேன் சுரந்து வண்டுகள் கிறங்க
மார் முலைக்குள் முகம் புதைத்த
மதலையின் மணி பால் பற்கள்
தூர் பதிந்த வெண் முத்தாய்
வேர் பிடித்து உயிர் துளிர்க்கும்
ஏர் உழவன் சால் இறைக்க
விழித்த பயிர் நீர் குடிக்க
போர்களத்துச் சிப்பாய் போல்
மார்விறைத்து தோள் உயர்த்தும்
அங்கே…….
» Read more about: சாதிக்கு சிதை மூட்டிய செங்கமலம்! »
தேங்கிக் கிடக்கும்
தேன்தமிழ் அழகைத்
தேடிக் கண்டேன் அறிதாய்!
ஏங்கித் தவிக்கும்
எந்தன் நெஞ்சின்
ஏக்கம் தன்னை அறிவாய்!
தாங்கிக் காப்பேன்
தமிழே உன்னை
தடைகள் தாண்டி வருவாய்!