இசைப்பாடல்

யே ராசா ராசா
என் நெஞ்சுக்குள்ளே
வந்து நீயும்
என்னை யென்ன
யென்ன செய்யப் போகிறாய்?

தினம் லேசா லேசா வந்து
என்னைத் தொட்டு
எங்கே நீயும் போகிறாய்?
இது பருவம் தந்த காதல் மயக்கமோ?
உன்றன் பார்வை யென்றும்
என்னை மயக்குமோ?
யே…..ராசா…. ராசா…..
யே…..ராசா…. ராசா…..

____ (யே…..ராசா…. ராசா…..)

மின்னல் போலெ
முன்னே வந்து
என்னை தொட்டுச்
செல்லும் உன்னைக்
கண்ணுக்குள்ளே வைத்து
நானும் பார்க்கிறேன்
அட என்னென்னமோ
செய்யச் சொல்லிக் கேட்கிறேன்

என் நாணம் இங்கே
விட்டுப் போச்சு
நாளும் தூக்கம்
கெட்டுப் போச்சு
நீயில்லாமல்
என்னன்னமோ ஆகிறேன்
அட நீரில்லாமல்
நீச்சல் இங்கே போடுறேன்

ஊருக்குள்ளே போகும் போது
உன்னை மட்டும் தேடும் கண்கள்
எங்கே எங்கே
எங்கே என்று பார்க்குதே
தினம் ஏக்கத்தாலே
தூக்கம் கெட்டுப் போனதே….
நீயும் இன்றி நானும் இல்லை
நெஞ்சுக்குள்ளே ஈரம் இல்லை
என் தாகம் தீர்க்கும்
தண்ணி உன்னைத்
தேடி நெஞ்சம் ஓடுதிங்கே

____ (யே…..ராசா…. ராசா…..)


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்