காலனைக் கண்டேன்!

பெருவெள்ளம் வந்தபோது காலன் றன்னைப் …… பெருங்காட்சி யாய்க்கண்ணால் கண்டேன்’இன்னும் ஒருபத்து மணித்துளியில் மூழ்கும்’ என்ற …… உயிரச்சக் காட்சியாகக் கண்டேன் நானும் தெருவோரம் பலவுயிர்கள் குப்பை யாகச் …… சேர்ந்தபோது காலனையே அங்குக் கண்டேன் உருவில்லாக் காட்சியாகக் கண்டேன் இன்றோ …… ஓரைந்து மணித்துளியில் நேரில் கண்டேன்! இன்றுகாலை பத்தினொன்று மணியி ருக்கும் …… இதயத்தைக் கைப்பிடியில் கசக்கித் தூக்கித் தொண்டைவழி மூளைக்கு வலிகொ டுத்துத் …… தொடர்ந்தேதும் Read more

பாரதி புகழ் வாழ்க

(கும்மி) கொள்ளைய டித்திட வந்தப றங்கிகள் கூடாரத் தைவிட்டு ஓடிட வே துள்ளியெ ழுந்திட்ட வீரமு ழக்கத்தின் சொந்தக்கா ரக்கவி பாரதி யே! வெந்தணற் வீச்சொடு வந்திட்ட தீக்கவி வெள்ளைப்ப றங்கியை வீழ்த்திட வே தந்திட்ட பாட்டனின் தாளிரு பூக்களைத் தாங்கிப்பு கழ்ந்திட வாருங்க ளேன்! காக்கை குருவியைக் காதலித் தாய் – வீட்டைக் காத்திடும் நாயினைக் காதலித் தாய் பாக்கள னைத்தையும் காதலித் தாய் – வாழ்வைப் பாதியில்ஏ Read more

எல்லோரும் வெல்வோம்

சொத்துக்கள் சேர்ப்பதுவே வெற்றி யன்று சொந்தங்கள் சேர்ப்பதுவும் வெற்றி யன்று எத்தனைநாள் இப்புவியில் வாழ்ந்தோம் என்னும் எண்ணிக்கை வெற்றியன்று வாழும் நாளில் எத்தனைபேர் வாழ்வதற்கே உதவி செய்தோம் என்பதுதான் வெற்றிக்குத் துலாக்கோல் தம்பி செத்தபின்னர் இவன்போல யாருண் டென்ற சேமிப்பே நிலையான வெற்றி யாகும். உலகத்தின் வரலாற்றை உற்றுப் பாராய் உழைப்பாலே உயர்ந்திட்ட பலரைக் காட்டும் துலக்காத செப்புப்பாத் திரத்தைப் போல தூங்கிக்கொண் டேயிருந்தால் உன்னைப் பார்த்துச் சிலந்திக்கும் சிரிப்புவரும் Read more

என் க(வி)தை

நூற்றெண்பத்தொன்பது சீர் ஆசிரிய விருத்தம் (27×7 சீர்கள் ஓரடிக்கு) ×நான்கடி பூவிழிப் பார்வை நோக்கினில் வீழ்ந்து புதைந்திடு மகவை தனில்நானும் பொற்றமிழ்ப் பெண்ணாள் பார்வையி லின்பம் பொங்கிட வீழ்ந்து பொலிவுற்றேன் புண்ணெனத் தாக்கும் உற்றவர் மற்றோர் பொசுக்கியும் வாழ்வில் இடறாமல் பொங்கியெ ழுந்தேன் என்முனே நின்ற பொறுப்பையு ணர்ந்தே செயல்பட்டேன் புண்மைகள் தீர நன்மைகள் சேரப் போற்றிட லானேன் என்வாழ்வில் பொற்பினைச் சேர்க்கும் கல்வியைக் கண்ணாய்ப் பொங்கிடு மாவ லால்கற்றேன் Read more

கும்மிப் பாடலில் வெண்டளை வேண்டுமா?

இசைத்தமிழ் வடிவமான சிந்துப் பாடல்களில் ஒன்றான “கும்மிப் பாடல்களில்” வெண்டளை வரவேண்டும் எனச் சிலர் கூறுகின்றனர். யாப்புத் தொடர்பான தற்கால நூல்களிலும் இந்தக் கருத்துள்ளது. ஆனால் “கும்மிப் பாட்டில் “வெண்டளை கட்டாயமில்லை என்பதே என் கருத்து. இக்கருத்து இரா.திருமுருகனாரின் வழியொட்டியது. பாடிப் பார்த்துணர்ந்த என் பயிற்சியின் வாயிலாகக் கண்டது. “இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் நீங்கள் எல்லோரும் வாருங்கள் தோழர்களே!” இப்பாடல் பாவேந்தரின் புகழ்பெற்ற பாடல். இதில், இந்திக்குத் தமிழ்நாட்டில் / என Read more

கவி, கவிதை, கவிஞர் இவை தமிழா? வடமொழியா?

“கவி, கவிதை. கவிஞர்” இவை தமிழா? வடமொழியா? “கவி ” வடமொழி என்று அண்மையில் அன்பர் ஒருவரின் கருத்தைப் படிக்க நேர்தது. அருளியாரின் கூற்றையும், பாவாணரின் ஆய்வையும் சுட்டிக் காட்டினார். மேலும், சங்க இலக்கியங்களில் இச்சொல் இல்லை என்பதே வலிமையான சான்று எனக்குறிப்பிட்டார். இந்தச் சொல்லாய்வு தொடர்பான சில கருத்துகளை என் முடிபாகக் கூற முயல்கிறேன். ( பிறமொழிக் கலப்பில் எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் Read more