புதுக் கவிதை

உறவுகள்

பாரிய மரத்தின் படர்ந்து நின்ற விழுதுகள்
நின்றன உறுதியாய் நிஜம் நாங்களென
மேலிருந்து கீழாய் ஆழமாய் பற்றிய விழுதினை
அதிசயமாய் பார்த்தது புதிதாய் முளைத்த விதை!

மலர்ந்து பூப்பூவாய் கண்மலர்
புன்னகையாய் சிமிழ் வாய் திறந்து
பிஞ்சுக் கால்களை செல்லமாய் உதைத்து
பற்றிப் பிடித்திட கைகளை அசைத்து!

 » Read more about: உறவுகள்  »