காம, மதவெறி பிடித்த கயவன்களே!

காம, மதவெறி பிடித்த கயவன்களே! எதை நீ தேடினாய் -அந்த எட்டு அகவை அசிஃபாவிடம் நீ தூங்க அவள் தூங்காமல் இரவு முழுவதும் உன்னை சாய்த்து வைத்திருந்த அந்தத் தோள்களையா? உன் பசி தீர்க்க பால் கொடுத்த அந்த மார்பகங்களையா? நீ கருவில் உருவான செய்தி கேட்டு அன்போடு உன்னைத் தடவிப்பார்த்த அந்த வயிற்றையா? தலையணையாக மடி தந்த அந்தத் தொடைகளையா? அடுப்பங்கரையிலேயே ஓய்வின்றி சுழன்று கொண்டிருக்கும் அவள் கால்களையா? Read more

மண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில்

விளக்கொளியில் மறைந்திருக்கும் மையிருட்டில் பொலிவிழந்த முகங்களின் அடையாளங்கள் நிலைத்திருக்கும்! தெளிவற்ற சிந்தனைக்குள் செயல்பாட்டின் விரல்கள் எல்லாம் முடங்கியிருக்கும்! ஒன்று கூடிப் பேசினாலும் முடிவற்ற சூழலுக்குள் பொய்மையும் புறங்கூறலும் மண்டிக்கிடக்கும்! இலக்கற்ற பயணங்களில் எண்ணற்ற பாதைகளின் குறுக்கீடுகளின் ஆளுமை குவிந்திருக்கும்! வண்ணமற்ற ஓவியத்தில் எண்ணமதை ஈர்க்காத கிறுக்கலின் வெளிப்பாடுகள் ஒளிந்திருக்கும்! புனரமைத்திடா புராதான சான்றுகளில் கலாச்சார படிமங்கள் பொதிந்திருக்கும்! வடித்துவைத்த சிலைக்குள் சிற்பியின் கைவண்ணம் எழிலோடு பரிமளிக்கும்! பேசும் மொழிகளுக்குள் பிழையில்ல Read more

யாராவது தூண்டிலோடு வருவார்களா?

ஒரு ஜன்னலின் கதவொன்றில் தெரிகிறது அவளின் நிழலாடும் உருவம்… இரவுநேர வெப்பச் சலனத்தில் கிணற்று நீரில் எத்தனை முறை குளிப்பது சலித்துக்கொள்ள முடியாத உடல்சூட்டில் தணியாத பெண்மையின் படைப்பு பகலில் கூட தூங்கமுடியாது இனம்புரியாத கனவுகளை ஏற்க மறுத்தாலும் பருவத்தின் பிடிக்குள் சிக்கித் தவிக்கவே செய்கிறது மனத்தின் கெண்டைகள் மீண்டும் ஜன்னலின் கதவிடுக்கில் பார்த்துக் கொண்டே விம்முகிறாள்… யாராவது தூண்டிலோடு வருவார்களா? துன்பக் கடலின் மீது வலைவீசி என்னை பிடிக்க!

விதைக்க மறந்த மனித நேயம்

1. எந்தேசம் எங்கேபோ கிறது சொல்லு … இழிநோக்கி நகரத்தான் மனிதம் என்றா சந்தையென கல்வியாகி திருட்டுக் கொள்ளை … சாதிமத சண்டைகளும் மனிதம் கொல்ல எந்ததிசை போகிறது மக்கள் கூட்டம் … ஏனிந்த மிருகத்தோல் மனிதன் போட்டான் வந்துதிக்கும் சூரியனும் மதங்கள் சாதி … மனிதனிலே பார்த்துதானோ இனியும் தோன்றும்? 2. உடன்பிறந்து வாழ்ந்துவரும் உனது ரத்தம் … ஊண்தின்னி யென்றான வேங்கை யர்கள் தடம்பதிக்க அறிவுகொள்ள கல்வி Read more

பாதமே வேதம்

உந்தன் பாதம் எந்தன் வேதம், உந்தன் கொலுசு எந்தன் இன்னிசை. ஆடும் கால்கள் ஆனந்த ஊற்று, ஓடும் பரல்கள் உயிரின் ஓசை, வண்ணப் பூச்சு வடிவின் வீச்சு, மின்னிடும் மெட்டி மனதின் பேச்சு, வெள்ளிக் கொலுசு அள்ளுது மனசை, துள்ளும் அதனின் துடிக்கும் ஓசை, வெல்லும் இசையிடம் வெஞ்சமர் புரியும். பாதம் மட்டுமே பார்க்கப் போதும், குளிர்ந்த பாதம் கோபுர அடித்தளம், மிளிறும் விரல்கள் மின்மினிப் பூச்சிகள். சிவந்தத் தாள்கள் Read more

வீடுபேறு உடைய வீடு

கிளைகள் அடர்ந்த தனிமரம்தான் அது தன் விழுதுகளை நம்பியே நிமிர்ந்து நிற்கும் அரைநூற்றாண்டாக … அதன்கிளைகள் மேல் பசிய இலைகளாகப் படர்ந்தன கிளிகள்… லட்சோபலட்சம் பைங்கிளிகளின் ஆராவாரிக்கும் சப்தம் எண்திசையெங்கும் பறக்கச் செய்கிறது. கிளிகளின் கொஞ்சல்களும் பழங்களைக் கொத்தியுண்ணும் இன்பமும் தாய்வயிற்றில் உதைக்கும்குழந்தையெனக் கொள்கிறது அந்த ஆலமரம் நாற்புறமும் சாலைகளை சத்தமிட்டபடியே குறுவண்டி பெருவண்டிகளெனப் பெருகியோடும் பேராற்றின் நடுவே அது செம்மாந்து நிற்பதை பார்த்தவர்கள்… சிலர் புரியாமல் உமிழ்ந்து போகிறார்கள் Read more

சிறுவர்கள் உலகம்

சிறுவர்கள் உலகம் புது உலகம் – பெரும் சாதனை படைக்கும் தனி உலகம் வறுமையின் துயரம் உடன் விலகும் – புது வசந்தங்கள் தந்தே பூ மலரும்! இது மழலைகள் பருவம் சின்ன நிலவுகள் உருவம் – என்றும் பாழ் நிலவாய்ப் பாரில் தாவி ஒளி கொடுப்போமே… பட்டாம் பூச்சி போலே நாங்கள் சிறகடிப்போமே… பார்வை போகும் தூரம் வரை பறந்து செல்வோமே… மொட்டாய் மலர்ந்து சிட்டாய்ப் பறந்து மணம் Read more

ரோஹிங்காஒரு கண்ணீர்க் காவியம்

  கண் வலிக்கும் ரோஹிங்காவின் காட்சி பல கண்டு கவி வரைந்தேன் என் மனதில் ஆற்றாமை கொண்டு புண் முளைக்கும் இதயத்தில் மக்கள் துயர் எண்ணி புகலிடத் திலும் பருக இல்லைத் துளித் தண்ணி விண் முழக்கம் போல் விழுதே வெடியெறி குண்டு விலை மதிக்க முடியாத உயிர் பல கொன்று மண்ணறைக்குள் புதைக்கவில்லை தீயினிலே இட்டு மனித ரத்தம் குடிக்கின்றார் மக்களினைச் சுட்டு! சுட்டழிக்குஞ் சுடு குழலுந் தேமி Read more

தன்னம்பிக்கை

துளைக்கப் பட்டோமென்று துவளவில்லை மூங்கில்கள்! மாலையில் வீழ்வோமென்று மலராமல் இல்லைமலர்கள்! வீழ்ந்து விட்டோமென்று விருட்சம் ஆகாமலில்லை விதைகள்! சிதைக்கப் பட்டோமென்று சிலைகள் ஆகாமலில்லை பாறைகள்! சேகரிக்கும்தேன் தனக்கில்லையானாலும் சேர்க்காமல் இருப்பதில்லை தேனீக்கள்! விளைந்ததும் வெட்டப்படுவோம் என்றாலும் விளையாமல் இருப்பதில்லை பயிர்கள்! தோல்விகள், சோதனைகள், ஏமாற்றங்கள், தடங்கல்கள், எதுவாகிலும் தன்னம்பிக்கை கொள்! மாற்றம்வரும் மகிழ்ச்சி பெறும், வழிகள் பலவுண்டு வாழ்க்கை வாழ்வதற்கே!

கருகி மியன்மார் நாறட்டும்

கடும் போக்கான கயவர்கள் எல்லாம் கருகி மியன்மார் நாறட்டும் பால் மணம் மாறாப் பாலகிப் பூவே ! பர்மா அழிவது நிச்சயண்டா பாவிகள் ஆணவம் பாரில் நிலைக்கா படைத்தவன் மேலே சத்தியண்டா! கால் கை இல்லா முண்டங்களாக காற்றுப்போன உடலங்கள் கண்ணீர்ப் பெருகிக் குருதியிற் கலந்து கடல்கள் சுமக்குஞ் சடலங்கள் தோல்கள் வெள்ளை என்பதினாலோ சூசிக்கு நோபல் விருது தொட்டில் குழந்தை செய்ததா பாவம்? தோஷமே நெஞ்சிற் கருது வால் Read more