பெண்ணின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உலகு என்பதுபோல்          பெண்ணின்றி  அமையாது நல்வாழ்வு.! சக்தியின்றிச் சிவனும் இல்லை என்றுரைத்து          சிவனும் சொன்னார் நெற்றிக் கண் திறந்தே.! பத்துமாதம் சுமந்துகாக்கும் பொறுமை கொண்டு          பக்குவமாய் உணவை பண்போடும் அன்போடும் பாசத்தோடு குழைத்து படைக்கும் குணவதியாய்         பார்போற்றும் உன்னத படைப்பு பெண்ணாவாள்.! தங்க மகளாய் பிறந்து Read more

வான் நிலவும் வண்ண நினை(ல)வும்

பால்வெளியில் பந்தெறிந்த தேவதையிங்கு யாரோ? பால்நிலவாய் வலம்வருமே வண்ணநிலா தானோ? வைரவெளிப் பொட்டலிலே வந்திடுவாள் அவளே வான்நிலவு மங்கையவள் வசங்கொள்வாள் நமையே! காதோடு வருடுமந்த காற்றோசை போலக் கதைபலவும் சொல்லிடுவார் நினைவோசை மேலே, வண்ணவண்ண நிறங்கொண்ட வானவில்லைக் கூட்டி வாழ்ந்ததிந்த வாழ்க்கையதன் வாசமதைத் தேடி.. உலவுகின்ற நிலவுபோல உள்ளோடு ஒளிரும் உறைந்தபனிக் குவியலென உள்ளமெல்லாம் சிலிர்க்கும் நினைவோடு கனவினையும் நித்தமிங்கு பூட்டி நிலவுக்கு ஈடாக காலவெளி பறப்போம்!  

ஆசையக் காத்துல தூது விட்டேன்

கிள்ளை மொழியெல்லாம் கிளியேயுன் நினைவூட்ட           மெல்ல மயக்குமென் மேவும்நிலை சொல்லுதற்குத் துள்ளும் கயல்சரியோ?  துடிப்பான மான்சரியோ?           மெல்ல அலையெழுப்பும் சிற்றோடை நீர்சரியோ? மஞ்சுப் பொதிசரியோ ? மயக்கும் விழிசரியோ?           கொஞ்சும் குயில்வந்து குரலிசைத்துச் சொல்லிடுமோ? நெஞ்சம் நிறைந்ததென் நெகிழ்ந்த காதலதைச்           சொற்களின் Read more

வாழ்வாங்கு வாழியவே பாட்டரசர்!

செந்தமிழின் பேரெழிலைத் தீட்டிடுவார்! நற்கவியால் முந்தைத் தமிழ்மரபை மூட்டிடுவார்! – சிந்தையெலாம் விந்தை புரிந்திடுவார்! மேன்மையுறும் பாட்டரசர் சந்தம் இனிக்கும் தழைத்து! கம்பன் கவிகாக்கும் காவலர்! போற்றியே நம்மின் தமிழ்காக்கும் நாவலர்! – செம்பொன்னார்! அம்மையப்பன் தாள்போற்றும் அன்புடையர்! பாட்டரசர் உம்பர் உவக்கும் உயிர்! தொல்காப் பியர்கழகம் தோற்றிய நற்கவிஞர்! ஒல்காப் புகழ்கண்ட உத்தமர்! – நல்லோர்கள் செல்வழியே சென்றிடுவார்! செந்தமிழ்ப் பாட்டரசர் சொல்லென்றும் வெல்லும் சுடர்ந்து! செந்தமிழர் வாழ்வு Read more

தமிழமின் வாழ்க தழைத்து!

விசித்திர அகவல் ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும். குறள் வெண்பா குமுத மலராகக் கோலவிதழ் பின்னும் தமிழமின் வாழ்க தழைத்து! அன்னைத் தமிழின் அமுதைப் பருகு மன்பன்! ஆற்றல் அரிமா! கி.மு முன்னே மொழியைத் முனைந்து காத்த தன்னே ரில்லாத் தமிழன் நாம மோதும் மறவன்! முத்தமிழ் வல்ல தாதும் மணக்கும் தகையன்! தீரா ஆசை கவிமேல்! ஆக்கம் Read more

தமிழ்க்கூட்டம் போதுமே…

தமிழால்நாம் கூடலா மென்றேன் ! சாதியால் நீ கூடிப்போனாய் ! தமிழால்நாம் கூடலா மென்றேன் ! தன்மதமே தேடிப் போனாய் ! தமிழால்நாம் கூடலா மென்றேன் ! தன்னூரார் நாடிப் போனாய் ! தமிழால்நாம் கூடலா மென்றேன் ! “தமிழென்ன தருமென் கின்றாய் ?” “தமிழ்க்கூட்டம் அறிவு நீட்டும் ! தமிழ்க்கூட்டம் நட்பு கூட்டும் ! தமிழ்க்கூட்டம் அன்பு நீட்டும் ! தமிழ்க்கூட்டம் வாழ்க்கை பேசும் ! தமிழ்க்கூட்டம் தவறை Read more

உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும் சித்திரமாய் இருந்திடாமல் உழைக்கின்ற மானிடரே ! உலகத்தின் ஆணிவேரே ! களைப்படையா உழைப்பாலே காலமுழுதும் நிலைப்போரே ! பிழைப்பதற்கு இவ்வழிபோல் பிறிதொன்று இல்லையே ! உச்சிவேளை தகித்தாலும் உணர்த்தும்பசி போக்கிடவே கச்சிதமாய் பணிமுடிக்கும் கல்மனதுக் காரர்களே ! மெச்சிடவே பலருமிங்கே மெய்வார்த்தைக் கூறிடுவர் , தச்சுத்தொழில் செய்தாலும் தவறில்லைத் தரணியிலே , காகிதமே பொறுக்கினாலும் கட்டாயம் அதுதொழிலே , ஆயுதங்கள் செய்தாலும் அத்தனையும் தொழில்தான் , தாகமெனத் Read more

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

முற்றிலும் சிற்பங்களோடு முறுவலுடன் ஆடும் உறிமாலை, பொன்னகை பூட்டி அலங்காரம் புன்னகை சிந்தும் உற்சவரும், மின்னிடும் விளக்குகள் சொலிக்க வண்ணக் கோலங்கள் நிறைந்த ரதவீதி, சுற்றிடும் உயர்ந்ததோர் தேரே நீர் சுற்றிடும் சூட்சுமம் அறிவீரா? உருண்டிடும் சக்கரம் சுழல உருவிலே சிறிய தொன்று, உரமதாய் உன்னைத் தாங்க ஊரெல்லாம் சுற்றி வருவீரே! பெற்றவர் அச்சினில் ஆணி பெருந்தேர் மக்களெனப் போற்ற, உற்சவர் என்றவர் குறிக்கோள் ஊர்வலம் சுற்றிடக் கண்டீர்! அழகினுக் Read more

ஆடிடு பெண்ணே

வானவில்லை வரிந்து உடுத்தி, வண்ண மயில்கள் ஆடுது; வாலிபத்துச் சோலையிலே, வந்து நின்று ஆடுது; வளைக்கரங்கள் கோர்த்திங்கு, வட்டம் சுற்றி ஆடுது; கிறுகிறுத்துப் போகும் தலை, சிரி… சிரித்தே மகிழுது. ஆலவட்டம் போலச் சுற்றி, அகமகிழ்ந்தே ஆடுது; ஆடும் குடை ராட்டினமாய், அழகு ஊஞ்சல் ஆடுது; ஆடிப்பாடு பெண்ணே இது, அகம் மகிழும் காலமே, அடுத்து பல பொறுப்பு வரும், அது வரையில் ஆடிடு.

வேரில் பழுத்த பலா!!!

வேர்தனிலே பழுத்திடுமா வேகமாகச் சுவைதருமா? பார்மீதில் தந்திடுமே பலாச்சுளையும் பக்குவத்தால் கார்கால கன்னிபோல  கனத்திருந்தால் பழமாகி சீர்போன்றே அழகான சிலையாகி நின்றிடுமே!!! மலர்களெல்லாம் மலர்ந்திடுமே மணந்தருமே நாள்தோறும். பலநாளின் பலந்தரவே பசுமையாக மலர்ந்திடுமே. அலர்ந்திடுமே அந்திவேளை அழகான அல்லிமலர் உலர்ந்தமனம் உவகைகொள்ளும் உள்ளமெங்கும் இன்பவெள்ளம். மணக்கின்ற மலர்களுக்கும் மறுவாழ்வு தந்திடுவோம் வனப்புடனே காத்திடுவோம் வரம்வேண்டி நின்றிடுவோம் கனப்போழுதும் மறவாது களிப்புடனே போற்றிடுவோம். மனம்முழுதும் ரசித்திடுவோம்  மலரட்டும் மொட்டுகளும். மண்ணுலகில் பிறக்கின்ற Read more