மரபுக் கவிதை
வாழ்வாங்கு வாழியவே பாட்டரசர்!
செந்தமிழின் பேரெழிலைத் தீட்டிடுவார்! நற்கவியால் முந்தைத் தமிழ்மரபை மூட்டிடுவார்! – சிந்தையெலாம் விந்தை புரிந்திடுவார்! மேன்மையுறும் பாட்டரசர் சந்தம் இனிக்கும் தழைத்து! கம்பன் கவிகாக்கும் காவலர்! போற்றியே நம்மின் தமிழ்காக்கும் நாவலர்! – செம்பொன்னார்! அம்மையப்பன் தாள்போற்றும் அன்புடையர்! பாட்டரசர் உம்பர் உவக்கும் உயிர்! தொல்காப் பியர்கழகம் தோற்றிய நற்கவிஞர்! ஒல்காப் புகழ்கண்ட உத்தமர்! – நல்லோர்கள் செல்வழியே சென்றிடுவார்! செந்தமிழ்ப் பாட்டரசர் சொல்லென்றும் வெல்லும் சுடர்ந்து! செந்தமிழர் வாழ்வு Read more
