வான் நிலவும் வண்ண நினை(ல)வும்
பால்வெளியில் பந்தெறிந்த தேவதையிங்கு யாரோ? பால்நிலவாய் வலம்வருமே வண்ணநிலா தானோ? வைரவெளிப் பொட்டலிலே வந்திடுவாள் அவளே வான்நிலவு மங்கையவள் வசங்கொள்வாள் நமையே! காதோடு வருடுமந்த காற்றோசை போலக் கதைபலவும் சொல்லிடுவார் நினைவோசை மேலே, வண்ணவண்ண நிறங்கொண்ட வானவில்லைக் கூட்டி வாழ்ந்ததிந்த வாழ்க்கையதன் வாசமதைத் தேடி.. உலவுகின்ற நிலவுபோல உள்ளோடு ஒளிரும் உறைந்தபனிக் குவியலென உள்ளமெல்லாம் சிலிர்க்கும் நினைவோடு கனவினையும் நித்தமிங்கு பூட்டி நிலவுக்கு ஈடாக காலவெளி பறப்போம்!





