மழை பெய்த மலைகளிலே
        மறுகி ஓடும் நீரோடை;
குறுகிய தோர் காட்டாறு
        கூடி வீழும் அருவிகளும்;
அடித்து வந்த மூலிகையின்
        அளவற்ற நறு மணங்களுடன்;
பரவி ஓடி வந்தநதி
        படர்ந்ததே சம வெளிகளிலே !

கரை கட்டும் சரிகைச்சேலை
        காற்றிலசைந்து நடந்தார்ப் போல்;
மணல் படுகை மீதெல்லாம்
        நதியாய் ஓடும் நீர்ச்சேலை.
இருகரையை வரிந்து கட்டி
        இசைந்த பச்சைச் செழிப்பூட்டி;
இகமெல்லாம் இழையோடி நிற்கும்
        இன்னுயிர்க் கமுதாகும் இன்நதியே !

ஓடிக் களிக்கும் நாளெல்லாம்
        உவந்து நீரால் அமுதூட்டும்;
உலர்ந்து கிடக்கும் நாளினிலும்
        ஊற்றா யிங்கு உவப்பளிக்கும்;
ஆடி அசைந்து கரைகளெல்லாம்
        அமுதுக் கிண்ணம் ஆக்கியபின்;
தேடி ஓடிச் சேர்ந்தடையும்
        தேர்ந்த ஆழி அன்பனுடன் !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »