நீரின்றி அமையாது உலகு என்பதுபோல்
          பெண்ணின்றி  அமையாது நல்வாழ்வு.!
சக்தியின்றிச் சிவனும் இல்லை என்றுரைத்து
          சிவனும் சொன்னார் நெற்றிக் கண் திறந்தே.!

பத்துமாதம் சுமந்துகாக்கும் பொறுமை கொண்டு
          பக்குவமாய் உணவை பண்போடும் அன்போடும்
பாசத்தோடு குழைத்து படைக்கும் குணவதியாய்
         பார்போற்றும் உன்னத படைப்பு பெண்ணாவாள்.!

தங்க மகளாய் பிறந்து தரணியில் மிளிர்ந்து
          தாயாக தோழியாக தாரமாக சகோதரியாக,
தனித்துவமாய் வளர்ந்து உயர்ந்து நின்று
          தன்வளர்ப்பில் தவறு நேராதுக் காத்திடுவாள்.!

குடும்பத்தை கோயிலாக குலம்தழைக்கச் செய்வாள்
          கொண்டவனை தெய்வமாகப் பெருமைக் கொள்வாள்.!
குழந்தைச் செல்வங்களை ஈன்றெடுத்து மகிழ்வோடு
          அன்பும் அறிவும்தந்து மெழுகாய் உருகிநிற்பாள்.!

சரசுவதியாய் லெட்சுமியாய் பார்வதியாய் என்றும்
          மனைவிளங்கச் செய்து தோள்கொடுத்து நிற்பவள்.!
அரவணைத்து ஆறுதலாய் அன்னையாக வந்தவள்
         அம்மா என்றழைக்க அபயம்தரும் சக்தியாவாள்.!

மாண்புடைய மகளிர் மகத்துவம் உணர்ந்து
          கண்ணில் இமையாய் கருத்தோடு காத்திடுவோம்..!
மண்ணில் இன்னலின்றி மகிழ்வோடு வாழ
          பெண்மையை போற்றி மதித்து மகிழ்வோம்.!

 


1 Comment

நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் · மார்ச் 8, 2020 at 15 h 20 min

இனிய வணக்கத்துடன் தமிழ்நெஞ்சம் சகோதரர் அவர்களுக்கு மகிழ்வுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. வாழ்த்துகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »