கவிதை
கவலைக்குரிய காலமாற்றம்!
ஒற்றைச் சேலையில்
தாலாட்டுக் கேட்ட
ஒருதாய் வயிற்று
உறவுகளெல்லாம்
ஒன்றுவிட்ட
சகோதரர்கள் போலானது !
ஒரு பாயில்
தூக்கம் பகிர்ந்த
ஒன்றுவிட்ட சோதர
சொந்தங்கள் தூரத்து
உறவு என்றானது!
ஒற்றைச் சேலையில்
தாலாட்டுக் கேட்ட
ஒருதாய் வயிற்று
உறவுகளெல்லாம்
ஒன்றுவிட்ட
சகோதரர்கள் போலானது !
ஒரு பாயில்
தூக்கம் பகிர்ந்த
ஒன்றுவிட்ட சோதர
சொந்தங்கள் தூரத்து
உறவு என்றானது!
ஒரு
சுற்றுப் பார்வையில்
உயிரே போய்விடும்
போல் இருக்கிறது
மனிதம் மரணித்துக்
கொண்டிருக்கும் மண்ணை
எண்ணுகையில்.
இயற்கை
அனர்த்தத்தின்
இழப்புக்களை கூட
இனத்துவேசத்துடன்
நோக்கும் மனநிலைக்கு
கடந்த காலத்தை
வடுக்களாக வரைந்து
சென்றிருக்கிறது
வரலாறு.!
தமிழ் அமுதம்
அளவுக்கு மீறி அருந்தினாலும்
நீ
உயிர்ப்பாய்
இன்னும் இன்னும்
தமிழ் மங்கைக்கு
கவிதைச் சேலை கட்டுகிறேன்
அவள் அழகு
திருஷ்டி படாமலிருக்க
தமிழ்
பசு
இலக்கியப் பால் கறக்கிறேன்
கவிதைத் தயிர்
சுவைக்க
தமிழ்
சாகரம்
நான் செல்கிறேன்
எழுதுகோல் தோணி
செலுத்தி
தமிழ் மான்
அது
துள்ளிவிளையடுகின்ற
காடு
நீயும்
நானும்
இறைவா
வேண்டும்
தமிழ்க் கடலில்
நான்
ஒரு மீனாகும் வரம்
அன்னை மொழி
மறந்தவன்
வீட்டுச் சேவல் கூட
நரி
மூச்சுக்கள் ஒன்றாகிடின்
யுகம்
யுகமாய்ச் சுவாசிப்பாள்
தமிழ் அன்னை
தமிழ்
செல்வம் என்பவன்
காப்பான்
தன்
உயிர் கொடுத்தும்.
சுட்டுவைத்தேன் பணியாரம்
சூடாறும் முன்னே
தட்டினிலே பரப்பிவைத்தேன்
தானாக விற்குமென்று .
மொத்தமாய் வித்திட்டு
முதலீடு செய்யலாமென்று
சப்தமிட்டுக் கூவிப்பார்த்தேன்,
சாப்பிட யாரும் வரவில்லை .
பெண்
உள்ளம் தந்த காதலிடம் நான் பாடவா
உறங்கு மின்ப இரவினிலே நான் நாடவா
இல்லமென்னும் மணமாலை நான் சூடவா
இன்பமான காதல் தேரில் நீ ஆட வா
ஆண்
கானத்து கருங்குயிலே நீ என்னருகே வா
உன் செம்பவள கனியிதழை பருக நான் வரவா
உன் விழியசைவில் கவி படைக்க நான் வரவா
இடை அழகை கவிதையிலே நான் தரவா
பெண்
தேடிவந்த தென்றலிடம் சொன்னேன்
சூடிவிட்ட மல்லிகையில் சொன்னேன்
என் நெஞ்சில் வரும் நேரமதை சொன்னேன்
என் நெஞ்சில் புது சுகம் ஒன்று கண்டேன்
என் நெஞ்சில் மோதும் நேரம் நின்று
ஆண்
உன் மல்லிகை கூந்தலிலே வண்டு
மதுவருந்தி பாடுவதை கண்டு
அசைகின்ற கொடியிடையாள் தண்டு
ஆடுதடி இடைவடிவில் இன்று
செல்வமோ பல கோடி
செயலாற்ற பல பேர்கள்
வெல்வாரோ யாரு மிலர்
வெறுப் பாரும் உலகிலில்லை
சொற்கேட்டு நடப் பதற்குச்
சொந்தங்கள் அணி திரள்வர்!
எல்லாமே இருந் தாலும்
என்மனதில் அமைதி இல்லை!
அனாதையாக கிடக்கிறார்
கோடிகளின் அதிபதி
சாலை விபத்து !
பயண களைப்பு
நிழல் தேடுகிறான்
விறகுவெட்டி !
சாலையில் பணப்பை
மரித்து போனது
மனசாட்சி !
பாதாமில் செய்திட்ட பாதுஷாவே
நான்தான் இனியுந்தன் நாதர்ஷாவே !
முந்திரியில் செய்தகுளோப் ஜாமூனே
முறுவலிலே நீதருவாய்முன் ஜாமீனே !
ஜீராவில் மிதக்கின்ற ஜாங்கிரியே
எனக்காக நீயென்றும் ஏங்குறியே !
என் காதலை
வலிமைப்படுத்தவே
எளிமைப்படுத்தி எழுதுகிறேன்
உனக்கான பாடலை.
…..
நான் புல்லாங்குழல்
உன் காற்றை
என்னில் செலுத்து
காதல் இசை
கவிதையாகும்.
உனக்கான திசை நோக்கி
என் எழுத்துக்கள் உதிர்கின்றன
அவை பிறந்த நேரம் இனிமையானவை
பிரசவ வலியின் வேதனை நீ அறியமாட்டாய்
எனக்குள் மூடி வைத்து இருக்கும்
என் வலிகள் அவை..