கவலைக்குரிய காலமாற்றம்!

ஒற்றைச் சேலையில் தாலாட்டுக் கேட்ட ஒருதாய் வயிற்று உறவுகளெல்லாம் ஒன்றுவிட்ட சகோதரர்கள் போலானது ! ஒரு பாயில் தூக்கம் பகிர்ந்த ஒன்றுவிட்ட சோதர சொந்தங்கள் தூரத்து உறவு என்றானது! ஒரே முற்றத்தில் கூடிநின்று பாசத்தை பரிமாறிய சொந்தமெல்லாம் பக்கத்து ஊர் பழகிய மனிதர்களைபோல போனது! உற்றார் சுற்றத்தார் எல்லாமே யாரென்று கேட்கும் நிலைக்கு பாசம் பச்சையம் இழந்துவிட்டது! ஆமாம்! பணம் அழைப்பு விடுக்கிறது பணத்துக்கு மட்டும்! வரவேற்று பந்தி பரிமாறுகிறது. Read more

மனிதம் மரணித்துப் போனது

ஒரு சுற்றுப் பார்வையில் உயிரே போய்விடும் போல் இருக்கிறது மனிதம் மரணித்துக் கொண்டிருக்கும் மண்ணை எண்ணுகையில். இயற்கை அனர்த்தத்தின் இழப்புக்களை கூட இனத்துவேசத்துடன் நோக்கும் மனநிலைக்கு கடந்த காலத்தை வடுக்களாக வரைந்து சென்றிருக்கிறது வரலாறு.!

மூச்சு

தமிழ் அமுதம் அளவுக்கு மீறி அருந்தினாலும் நீ உயிர்ப்பாய் இன்னும் இன்னும் தமிழ் மங்கைக்கு கவிதைச் சேலை கட்டுகிறேன் அவள் அழகு திருஷ்டி படாமலிருக்க தமிழ் பசு இலக்கியப் பால் கறக்கிறேன் கவிதைத் தயிர் சுவைக்க தமிழ் சாகரம் நான் செல்கிறேன் எழுதுகோல் தோணி செலுத்தி தமிழ் மான் அது துள்ளிவிளையடுகின்ற காடு நீயும் நானும் இறைவா வேண்டும் தமிழ்க் கடலில் நான் ஒரு மீனாகும் வரம் அன்னை மொழி Read more

பரிதவிக்கும் பணியாரம்

சுட்டுவைத்தேன் பணியாரம் சூடாறும் முன்னே தட்டினிலே பரப்பிவைத்தேன் தானாக விற்குமென்று . மொத்தமாய் வித்திட்டு முதலீடு செய்யலாமென்று சப்தமிட்டுக் கூவிப்பார்த்தேன், சாப்பிட யாரும் வரவில்லை . என்னென்ன நினைத்திருந்தேன் ஏழெட்டுத் திட்டம்போட்டேன் , அடுக்குமாடிக் கட்டியதில் ஆடம்பரமாய் ஆடப்பார்த்தேன். அழகானக் கப்பல்வாங்கி அயல்நாடு செல்ல பார்த்தேன் . அத்தனையும் பாழாச்சே ! அறுந்துப்போன நூலாச்சே ! பாவிக்கண்ணுப் பட்டதுவோ பாதகமாய் ஆயிடுச்சே ! கொள்ளிக்கண்ணுப் பட்டதுவோ கூவிவிற்றும் வாங்கலியே ! Read more

நெஞ்சிலோர் புதுசுகம்!

பெண் உள்ளம் தந்த காதலிடம் நான் பாடவா உறங்கு மின்ப இரவினிலே நான் நாடவா இல்லமென்னும் மணமாலை நான் சூடவா இன்பமான காதல் தேரில் நீ ஆட வா ஆண் கானத்து கருங்குயிலே நீ என்னருகே வா உன் செம்பவள கனியிதழை பருக நான் வரவா உன் விழியசைவில் கவி படைக்க நான் வரவா இடை அழகை கவிதையிலே நான் தரவா பெண் தேடிவந்த தென்றலிடம் சொன்னேன் சூடிவிட்ட மல்லிகையில் Read more

முதல் வசந்தம்!

செல்வமோ பல கோடி செயலாற்ற பல பேர்கள் வெல்வாரோ யாரு மிலர் வெறுப் பாரும் உலகிலில்லை சொற்கேட்டு நடப் பதற்குச் சொந்தங்கள் அணி திரள்வர்! எல்லாமே இருந் தாலும் என்மனதில் அமைதி இல்லை! பொல்லாத எண்ண மொன்று புகுந்து ஆட் கொண்டதனால்! எல்லாமெ எனக் கென்று இடர்பட்டேன் இத்தனை நாள்! நல்லதோர் வழி கண்டேன் நான் அதைக் கடைப்பிடித்தேன்! எல்லோர்க்கும் பகிர்ந் தளித்தேன் என் செல்வம் அத்தனையும்! வல்லோனோ என் Read more

பிரேம் _ன் ஹைக்கூ துளிகள்

அனாதையாக கிடக்கிறார் கோடிகளின் அதிபதி சாலை விபத்து  ! பயண களைப்பு நிழல் தேடுகிறான் விறகுவெட்டி  ! சாலையில் பணப்பை மரித்து போனது மனசாட்சி  ! வாழ்க்கை பயணம் புதிய தேடல் ஆரம்பம் முதலிரவு   ! திரும்பி பார்க்காத தொகுதி திருந்திவிட்ட மக்கள் தேர்தல் புறக்கணிப்பு சர்க்கரை இருப்பு இல்லை காட்டிக்கொடுத்தது கூட்டமாய் எறும்புகள் நிலாச்சோறூட்டும் அம்மா நித்தம் ஏங்கும் சிறுவன் எதிரிலே அனாதை விடுதி படமெடுக்கத்தான் வந்தது யாரும் Read more

பாதுஷா

பாதாமில் செய்திட்ட பாதுஷாவே நான்தான் இனியுந்தன் நாதர்ஷாவே ! முந்திரியில் செய்தகுளோப் ஜாமூனே முறுவலிலே நீதருவாய்முன் ஜாமீனே ! ஜீராவில் மிதக்கின்ற ஜாங்கிரியே எனக்காக நீயென்றும் ஏங்குறியே ! ஜோராக மிளிரும்பால் கோவாவே சொந்தமாக நீவரணும் ஏவாளே ! நாமணக்க சுவைதந்த  அல்வாவே நமக்குமினி வாழ்வுண்டோ சொல்வாயே ! பந்தியிலே வைத்திருக்கும் லட்டுநீயே பசிக்கிறது ஊட்டிவிடு பிட்டுநீயே ! பசும்பாலில் செய்திட்ட பாஸந்தியே பகலிரவாய் காத்திருக்கேன் வா,சந்தியே ! புதுநெய்யில் Read more

காதல் இசை

என் காதலை வலிமைப்படுத்தவே எளிமைப்படுத்தி எழுதுகிறேன் உனக்கான பாடலை. ….. நான் புல்லாங்குழல் உன் காற்றை என்னில் செலுத்து காதல் இசை கவிதையாகும். ….. உன் காதலை அல்ல உன்னையே பெறுவதற்காய் தவமாய் தவமிருக்கிறேன்.

சிதறல்கள்

உனக்கான திசை நோக்கி என் எழுத்துக்கள் உதிர்கின்றன அவை பிறந்த நேரம் இனிமையானவை பிரசவ வலியின் வேதனை நீ அறியமாட்டாய் எனக்குள் மூடி வைத்து இருக்கும் என் வலிகள் அவை.. முதல் முதலாய் என் உணர்வில் உதிர்ந்தவை இந்த பிரபஞ்சத்தில் ஒலிக்கும் பல சொற்களின் கலவையாக காற்றில் கலந்து விடலாம் காலம் பதில் உதிர்க்கலாம்… என் எழுத்துக்கள் ஏட்டில் தானே என அலட்சியப்படுத்தாதே.. அவை என் நாட்குறிப்புகளின் முக்கிய பதிவுகள் மலையளவு Read more