செல்வமோ பல கோடி
செயலாற்ற பல பேர்கள்
வெல்வாரோ யாரு மிலர்
வெறுப் பாரும் உலகிலில்லை
சொற்கேட்டு நடப் பதற்குச்
சொந்தங்கள் அணி திரள்வர்!
எல்லாமே இருந் தாலும்
என்மனதில் அமைதி இல்லை!
பொல்லாத எண்ண மொன்று
புகுந்து ஆட் கொண்டதனால்!
எல்லாமெ எனக் கென்று
இடர்பட்டேன் இத்தனை நாள்!
நல்லதோர் வழி கண்டேன்
நான் அதைக் கடைப்பிடித்தேன்!
எல்லோர்க்கும் பகிர்ந் தளித்தேன்
என் செல்வம் அத்தனையும்!
வல்லோனோ என் மனதில்
வசந் தத்தைப் பரிசளித்தான்!