பாதாமில் செய்திட்ட பாதுஷாவே
நான்தான் இனியுந்தன் நாதர்ஷாவே !
முந்திரியில் செய்தகுளோப் ஜாமூனே
முறுவலிலே நீதருவாய்முன் ஜாமீனே !

ஜீராவில் மிதக்கின்ற ஜாங்கிரியே
எனக்காக நீயென்றும் ஏங்குறியே !
ஜோராக மிளிரும்பால் கோவாவே
சொந்தமாக நீவரணும் ஏவாளே !

நாமணக்க சுவைதந்த  அல்வாவே
நமக்குமினி வாழ்வுண்டோ சொல்வாயே !
பந்தியிலே வைத்திருக்கும் லட்டுநீயே
பசிக்கிறது ஊட்டிவிடு பிட்டுநீயே !

பசும்பாலில் செய்திட்ட பாஸந்தியே
பகலிரவாய் காத்திருக்கேன் வா,சந்தியே !
புதுநெய்யில் செய்திட்ட மைசூர்பாகே
பளபளன்னு மின்னுகின்ற உடல்வாகே !

பொன்னாக சிவந்திருக்கும் அதுரசமே
பூரிக்க  வந்திருக்கும்  இதழ்ரசமே !
தித்திக்க ஊறிவந்த தேன்குழலே
தினந்தோறும் வரவேண்டும் வான்முகிலே !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.