உன்ன யெண்ணி ஏங்க வச்சே

நான் கோயிலுக்கு நடந்து போகயிலே எந்தன் எதிரே வந்து தரிசனம் தந்தவளே நான் முதல் முதலா உன்னை பார்த்தேன் எந்தன் விழிகளிலே உன்னை சேர்த்தேன் காதலோடு பூவெடுத்து பூமாலை கோர்த்தேன் நெத்தியில நீதானே பொட்டு ஒன்னு வைச்சே ஊசி நூலு இல்லாம ஏன்டி எம்மனச தைச்சே ஏறெடுத்து பார்த்தில்ல நான் இதுவரை பெண்ணே தினமும் உன்னயெண்ணி ஏங்க வச்சே ஏன்டி கண்ணே! நீ என்னோடு சேர்ந்த நீங்காத சொந்தமடி ஏழேழு Read more

பிரேம் _ன் ஹைக்கூ துளிகள்

அனாதையாக கிடக்கிறார் கோடிகளின் அதிபதி சாலை விபத்து  ! பயண களைப்பு நிழல் தேடுகிறான் விறகுவெட்டி  ! சாலையில் பணப்பை மரித்து போனது மனசாட்சி  ! வாழ்க்கை பயணம் புதிய தேடல் ஆரம்பம் முதலிரவு   ! திரும்பி பார்க்காத தொகுதி திருந்திவிட்ட மக்கள் தேர்தல் புறக்கணிப்பு சர்க்கரை இருப்பு இல்லை காட்டிக்கொடுத்தது கூட்டமாய் எறும்புகள் நிலாச்சோறூட்டும் அம்மா நித்தம் ஏங்கும் சிறுவன் எதிரிலே அனாதை விடுதி படமெடுக்கத்தான் வந்தது யாரும் Read more

என் வீட்டு இளவரசி

உன்னோடு கொஞ்சி
துள்ளி விளையாடவே
விண்மீன்கள் ரெண்டும்
ஓடி வந்து உந்தன்
விழிகளுக்குள் ஒளிந்ததோ !
வெள்ளி நிலவே
உன்ன தாலாட்டவே
வானவில் அந்தரத்தில்
ஊஞ்சல் கட்டி தொங்குதோ !

எம்மனசு !

வாடுது வாடுது எம்மனசு இங்கே உன்னை நினைத்து வாடுது … தேடுது தேடுது எந்தன் விழிகள் கனவில் உன்ன தேடுது … ஆடுது ஆடுது காதலை சொல்லி மனசு கூத்தாடுது … கூடுது கூடுது வான் மேகங்கள் பூ மழை தூவ கூடுது … நாடுது நாடுது மழைத் துளியில் சேர்ந்து நனைந்திட … உந்தன் வரவை என்னுள்ளம் நாடுது … பாடுது பாடுது என்னை தேடி நீ வந்ததுமே Read more