படுத்திருந்தும்
உறக்கமில்லை
காலி பானை!


மழலை தந்த முத்தம்
குழந்தையாக மாறினாள் அன்னை


வாகனத்தை முந்தி சென்றான்
வாழ்க்கை அவனை முந்திசென்றது
சாலை விபத்து


கட்டுக்கடங்கா வேகத்தை
கட்டுபடுத்தியது மரணம்
சாலைவிபத்து


தேன் சுரக்கும்
அக்ஷய பாத்திரம்
இதழ்கள்


திரைகடல் ஓடி வந்தது
திரவியம் தேடித்தான்
திரவமானது வாழ்க்கை


இல்லறத்தின் கதவு
சாத்தப்பட்டது முதலிரவோடு
அழைப்பிதழாக வந்தது விசா


வாழ்க்கையின் வெளிச்சம்
இரு வருடமே
கையெழுத்தானது ஒப்பந்தம்
வெளிநாடு வேலை

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.