அனாதையாக கிடக்கிறார்
கோடிகளின் அதிபதி
சாலை விபத்து  !


பயண களைப்பு
நிழல் தேடுகிறான்
விறகுவெட்டி  !


சாலையில் பணப்பை
மரித்து போனது
மனசாட்சி  !


வாழ்க்கை பயணம்
புதிய தேடல் ஆரம்பம்
முதலிரவு   !


திரும்பி பார்க்காத தொகுதி
திருந்திவிட்ட மக்கள்
தேர்தல் புறக்கணிப்பு


சர்க்கரை இருப்பு இல்லை
காட்டிக்கொடுத்தது
கூட்டமாய் எறும்புகள்


நிலாச்சோறூட்டும் அம்மா
நித்தம் ஏங்கும் சிறுவன்
எதிரிலே அனாதை விடுதி


படமெடுக்கத்தான் வந்தது
யாரும் முன்வரவில்லை
கருநாகம்


1 Comment

kowsy · மே 16, 2016 at 20 h 08 min

அற்புதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.