என் வீட்டு முல்லைக்கொடி
நீ சிரிக்கும் போது சில்லரையாக
முத்து பவளம் கொட்டுமடி !
பூந்தளிரே நீ மழலை பருவமே
என் அன்னையின் மறு உருவமே !
உன்னோடு கொஞ்சி
துள்ளி விளையாடவே
விண்மீன்கள் ரெண்டும்
ஓடி வந்து உந்தன்
விழிகளுக்குள் ஒளிந்ததோ !
வெள்ளி நிலவே
உன்ன தாலாட்டவே
வானவில் அந்தரத்தில்
ஊஞ்சல் கட்டி தொங்குதோ !
செம்பருத்தி பூவு உந்தன்
செவ்விதழில் முத்தமிட்டு
தேன் சேகரித்து போக வந்ததோ !
தவமாய் தவமிருந்ததாலே
பொக்கிஷமாக கிடைத்த
தங்க ரதம் நீயல்லவா !
பல்லக்கில் உன்னை
தூக்கி சுமந்து கொண்டு
பவனி வரும் தந்தை நானல்லவா !
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பே என்றும் உயர்வாகும்! உடலை உறுதி ஆக்கிவிடும்! தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே தளரா உழைப்பின் பலனன்றோ! பிழைக்கும் ஏழை உடல்வருத்திப் பெரிதும் உழைப்பர் பசியுடனே! உழைப்போர் நலனைக் காத்திடுவோம்! உதவி செய்தே ஆதரிப்போம்! வயலில் உழைக்கும் விவசாயி வளத்தைச் சேர்க்கும் உழைப்பாளி! அயரா Read more