காட்டழகி! என் வீட்டழகி!

நாவல் பழ நிறத்தழகி நாயுருவிக் கண்ணழகி-நான் ஆவல் படும் அழகெல்லாம் அடங்கி நிற்கும் பேரழகி சேவல்க்கோழி கொண்டையென சிவந்திருக்கும் உதட்டழகி-உன் பாலைப்பழச் சொல்லுக்கு காளை மனம் ஏங்குதடி! நீர்முள்ளி போலவுந்தன் நீள்மௌனம் தைத்தாலும் மூங்கில் முளை புன்னகையே என் முழுநேர நினைப்பாச்சே! ஆளில்லா ஊருக்கு இலும்பைப்பு சக்கரையாம்! நீயில்லா மனத்துக்கு கண்ணீரே கவிதைகளா? மட்பாண்டம் தாங்கி-நிற்கும் அட்டாளை போல உளமாசைகளை அடுக்கி வைத்து காத்திருக்கு பேரழகே! புயலாக உன் பதிலோ Read more

கவலைக்குரிய காலமாற்றம்!

ஒற்றைச் சேலையில் தாலாட்டுக் கேட்ட ஒருதாய் வயிற்று உறவுகளெல்லாம் ஒன்றுவிட்ட சகோதரர்கள் போலானது ! ஒரு பாயில் தூக்கம் பகிர்ந்த ஒன்றுவிட்ட சோதர சொந்தங்கள் தூரத்து உறவு என்றானது! ஒரே முற்றத்தில் கூடிநின்று பாசத்தை பரிமாறிய சொந்தமெல்லாம் பக்கத்து ஊர் பழகிய மனிதர்களைபோல போனது! உற்றார் சுற்றத்தார் எல்லாமே யாரென்று கேட்கும் நிலைக்கு பாசம் பச்சையம் இழந்துவிட்டது! ஆமாம்! பணம் அழைப்பு விடுக்கிறது பணத்துக்கு மட்டும்! வரவேற்று பந்தி பரிமாறுகிறது. Read more