ஒற்றைச் சேலையில்
தாலாட்டுக் கேட்ட
ஒருதாய் வயிற்று
உறவுகளெல்லாம்
ஒன்றுவிட்ட
சகோதரர்கள் போலானது !

ஒரு பாயில்
தூக்கம் பகிர்ந்த
ஒன்றுவிட்ட சோதர
சொந்தங்கள் தூரத்து
உறவு என்றானது!

ஒரே முற்றத்தில்
கூடிநின்று பாசத்தை
பரிமாறிய சொந்தமெல்லாம்
பக்கத்து ஊர் பழகிய
மனிதர்களைபோல போனது!

உற்றார் சுற்றத்தார்
எல்லாமே யாரென்று கேட்கும்
நிலைக்கு பாசம்
பச்சையம் இழந்துவிட்டது!

ஆமாம்!
பணம் அழைப்பு விடுக்கிறது
பணத்துக்கு மட்டும்!
வரவேற்று பந்தி பரிமாறுகிறது.
பணம் பணத்துக்கு பணத்தை!

பணம் பணத்தை
புதுப்பிக்கையில்
இங்கே பாசத்துக்கு
மலர்வளையம் வைக்கபடுகிறது!

மனங்களுக்கு
இனியென்ன வேலை இங்கே!?
அவைதானே பணமெனும்
விசத்தால் கொலை
செய்யப்படுகிறதே!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.