என் காதலை
வலிமைப்படுத்தவே
எளிமைப்படுத்தி எழுதுகிறேன்
உனக்கான பாடலை.

…..

நான் புல்லாங்குழல்
உன் காற்றை
என்னில் செலுத்து
காதல் இசை
கவிதையாகும்.

…..

உன் காதலை அல்ல
உன்னையே பெறுவதற்காய்
தவமாய் தவமிருக்கிறேன்.


5 Comments

க.முரளி (spark MRL K) · ஜூலை 20, 2016 at 15 h 33 min

நான் புல்லாங்குழல்
உன் காற்றை
என்னில் செலுத்து
காதல் இசை
கவிதையாகும்.

என்ற வரி அருமை தோழரே… தொடர்ந்து எழுதுங்கள்… என் வாழ்த்துக்கள்

பெயரிலி · ஜூலை 20, 2016 at 17 h 42 min

அருமை தோழர்

sowkath ali. H · ஜூலை 20, 2016 at 20 h 04 min

அருமை… மூன்று கவிதைகளுமே அருமை… உன்னையே பெறுவதற்காக”… வரிகளில் உண்மையான காதல் அழகாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது… மென்மேலும் வளர்க கவிஞர் கேப்டன் யாசீன் அவர்களின் கவித் தொண்டு…

khaja muhyidheen · ஜூலை 21, 2016 at 4 h 55 min

கவிஞர்கள் வரிசை உங்கள் போன்ற புலவர்களால் இறுதி வரை தொடரட்டும்
தமிழ் மொழிக்கு இறைவன் கொடுத்த உயிரோட்டம் நீங்கள்
தமிழ் வாழ்க கவிஞர்கள் வளர்க……..
என் தாய் மொழியின் வலிமையை இந்த கவிதை மூலம் அறிந்து கொண்டேன்

Abu Thahir · ஜூலை 21, 2016 at 18 h 54 min

Very nice sir

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...