உனக்கான கரை

உனக்காகக் காத்திருக்கும் கணங்கள் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக உனக்கான கவிதைகளை எழுதிக் கொண்டே இருக்கிறேன். எதைக் கண்டாலும் கிடைக்கிறது உனக்கான கவிதை. உன்னை நினக்கும்போதெல்லாம் உடனே பரிசாகத் தருகிறாய் கவிதைகளை. உன்னைப் பற்றிய என் கவிதை அழகானது உன்னைப்போல. கடல் நான் கவிதை அலைகளை உன்னை நோக்கி அனுப்பிக் கொண்டே இருப்பேன். என் எல்லாப் பாடல்களும் உனக்கான கரையிலேயே நிற்கின்றன கிளிஞ்சல்களைப் பொறுக்கிக் கொண்டு. உனக்கான கவிதை தேடி மொழிக் Read more

எங்க ஊர் ஆரம்பப் பள்ளி

எங்க ஊர் ஆரம்பப் பள்ளி தங்கமாக மின்னும் துள்ளி தேனறிவு தரும் அள்ளி. நாவில் சுவைகூட்டும் நெல்லி. எங்க ஊர் ஆரம்பப் பள்ளி அறிவுப் பால் கொடுக்கும் அம்மா விரல் பிடித்து அழைத்திடும் அப்பா தோளோடு தோள் உரசும் நண்பன். அகர முதல எழுத்தெல்லாம் அன்பா சொல்லிக் கொடுக்கும் சிகரம் செதுக்கும் சிற்றுளியை சுகமா அள்ளிக் கொடுக்கும். ஆளும் வளர அறிவைவளர்த்து பாலும் பழமாய் இனிமை சேர்க்கும் முள்ளை ஒழித்து Read more

அக்னிச்சிறகு

அப்துல் கலாம் இந்தியத் தாயின் முகம். இந்தியாவின் முகவரி. நம் நாட்டின் வடக்கே இமயமலை கிழக்கே அப்துல் கலாம். நடமாடிய விஞ்ஞானம் தந்தை தெரஸா இந்தியாவின் ரியல் சூப்பர் ஸ்டார். இந்தியாவை தலைநிமிரச் செய்த இமயத் தமிழன். மனித நேயம் மிக்க மகத்துவ தேசத்தை மண்ணில் சமைக்க சுற்றிச் சுழன்ற மனிதத் தேனி. அவர் உள்ளத்தில் முளைத்த ஏவுகணை விண்ணைத் துளைத்தது. நெருப்பை – இளைஞர்களின் நெஞ்சங்களில் ஏற்றிய நெம்புகோல். Read more

காதல் இசை

என் காதலை வலிமைப்படுத்தவே எளிமைப்படுத்தி எழுதுகிறேன் உனக்கான பாடலை. ….. நான் புல்லாங்குழல் உன் காற்றை என்னில் செலுத்து காதல் இசை கவிதையாகும். ….. உன் காதலை அல்ல உன்னையே பெறுவதற்காய் தவமாய் தவமிருக்கிறேன்.

மகளிர் விதைத்திடும் மாண்பு

மகளிர் – திரு
மணத்தின் பெயரால்
வேறில்லம் சென்றால்
காய்த்துக் கனியாவாள்
கணவனுடைய
கண்ணின் மணியாவாள்
இல்லற இலக்கணத்தின்
அணியாவாள்.