எங்க ஊர் ஆரம்பப் பள்ளி
தங்கமாக மின்னும் துள்ளி
தேனறிவு தரும் அள்ளி.
நாவில் சுவைகூட்டும் நெல்லி.

எங்க ஊர் ஆரம்பப் பள்ளி
அறிவுப் பால் கொடுக்கும் அம்மா
விரல் பிடித்து அழைத்திடும் அப்பா
தோளோடு தோள் உரசும் நண்பன்.

அகர முதல எழுத்தெல்லாம்
அன்பா சொல்லிக் கொடுக்கும்
சிகரம் செதுக்கும் சிற்றுளியை
சுகமா அள்ளிக் கொடுக்கும்.

ஆளும் வளர அறிவைவளர்த்து
பாலும் பழமாய் இனிமை சேர்க்கும்
முள்ளை ஒழித்து மலரை மலர்த்தி
வெள்ளை வண்ணம் வாழ்வில் சேர்க்கும்.

ஒன்றிரண்டு மட்டுமல்ல
ஒன்று முதல் இறுதி வரை
ஒவ்வொன்றாய்ப் போதிக்கும்
உன்னதப் பள்ளி
எங்க ஊர் ஆரம்பப் பள்ளி.


1 Comment

முல்லை ஹம்ஸா · அக்டோபர் 17, 2016 at 17 h 18 min

எளிய நடையில் ஒரு அற்புதமான கவிதை…….பள்ளி நாட்களை நினைவு கூற வைத்தமைக்கு நன்றிகள் கேப்டன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.