உனக்காகக்
காத்திருக்கும் கணங்கள்
வீணாகிவிடக் கூடாது
என்பதற்காக
உனக்கான கவிதைகளை
எழுதிக் கொண்டே இருக்கிறேன்.

எதைக் கண்டாலும்
கிடைக்கிறது
உனக்கான கவிதை.

உன்னை
நினக்கும்போதெல்லாம்
உடனே
பரிசாகத் தருகிறாய்
கவிதைகளை.

உன்னைப் பற்றிய
என் கவிதை
அழகானது
உன்னைப்போல.

கடல் நான்
கவிதை அலைகளை
உன்னை நோக்கி
அனுப்பிக் கொண்டே இருப்பேன்.

என் எல்லாப் பாடல்களும்
உனக்கான
கரையிலேயே நிற்கின்றன
கிளிஞ்சல்களைப்
பொறுக்கிக் கொண்டு.

உனக்கான
கவிதை தேடி
மொழிக் கடலில்
முத்துக் குளிக்கையில்
மூழ்கிப் போனேன்.

முனை மழுங்கிய
என் எழுதுகோல்
தடுமாறுகிறது
ஆனாலும்
என் எல்லாக் கவிதைகளிலும்
உயிரோட்டமாய்
உலவுகிறாய் நீ.

உன் மீதான
என் காதலை
ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்
என் கவிதைகள்
குப்பைகள்.

எங்கே
எழுதி முடிக்கின்றேனோ
அங்கிருந்து துவங்குகிறது
உனக்கான
இன்னொரு பாடல்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.