ஐந்தாண்டுகளுக்கொருமுறை
வரிசையில் வந்து
காதுகுத்திக் கொள்ளும்
வாக்காளர்கள்.

கறைபடிந்த கைகளுக்கே
வாக்களித்தோம்
என்பதை உணர்த்த
கறையாய் கையில் மை.

இலவசங்களைக் கொடுத்து
வளர்த்துப் பழக்கப்பட்ட
கிளிப் பிள்ளைகள்.

ஐந்தாண்டுகளுக்கு முன் அளித்த
அதே வாக்குறுதிகள்
மறுபடியும் ஊர்வலமாய்…
மறதியின் பிடியில்
வாக்காளர்கள்.

மாற்றம் என்ற பெயரில்
ஏமாற்றப்பட்டோம் என்பதைக்கூட
ஏற்றுகொள்ளாத ஏமாளிகள்.

காலம் மாறும்.
வாக்காளர்கள்
விழிப்புணர்வை அடையும்
காலம்
வெகுதூரம் இல்லை.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.