உனக்கான திசை நோக்கி
என் எழுத்துக்கள் உதிர்கின்றன
அவை பிறந்த நேரம் இனிமையானவை
பிரசவ வலியின் வேதனை நீ அறியமாட்டாய்
எனக்குள் மூடி வைத்து இருக்கும்
என் வலிகள் அவை..
முதல் முதலாய் என் உணர்வில்
உதிர்ந்தவை
இந்த பிரபஞ்சத்தில் ஒலிக்கும்
பல சொற்களின் கலவையாக
காற்றில் கலந்து விடலாம்
காலம் பதில் உதிர்க்கலாம்…
என் எழுத்துக்கள் ஏட்டில் தானே
என அலட்சியப்படுத்தாதே..
அவை என் நாட்குறிப்புகளின்
முக்கிய பதிவுகள்
மலையளவு உயரத்திற்கு ஒப்பானது.
அங்கு நிகழ்ந்த உரையாடல்கள்
குரல்கள் உடைந்து விடலாம்
கூடவே கடதாசிகள் கிழிக்கப்படலாம்
என்னில் பிரதிபலித்த என் உணர்வுகள்
விலை மதிப்பற்றவை
எனக்கான ராஜ்ஜியத்தில்
படைக்கப்பட்ட பிரம்மனின்
பிரம்மாண்டங்கள்..
கோர்வையாய் உதிர்கின்றன
என் எழுத்துக்களாய்…
அவை உன்னுடன் வாழ்ந்த
ஒவ்வொரு இன்ப துளிகளுக்காய்
படைக்கப்பட்டனவா..?
அல்லது உனக்காக சிதறி எறியபட்ட
வேதனைகளின்
சிதறல்களா..?
நான் குளிர் காய்கின்றேன்
அதன் பிறப்பில் …!!!