தமிழ் அமுதம்
அளவுக்கு மீறி அருந்தினாலும்
நீ
உயிர்ப்பாய்
இன்னும் இன்னும்

தமிழ் மங்கைக்கு
கவிதைச் சேலை கட்டுகிறேன்
அவள் அழகு
திருஷ்டி படாமலிருக்க

தமிழ்
பசு
இலக்கியப் பால் கறக்கிறேன்
கவிதைத் தயிர்
சுவைக்க

தமிழ்
சாகரம்
நான் செல்கிறேன்
எழுதுகோல் தோணி
செலுத்தி

தமிழ் மான்
அது
துள்ளிவிளையடுகின்ற
காடு
நீயும்
நானும்

இறைவா
வேண்டும்
தமிழ்க் கடலில்
நான்
ஒரு மீனாகும் வரம்

அன்னை மொழி
மறந்தவன்
வீட்டுச் சேவல் கூட
நரி

மூச்சுக்கள் ஒன்றாகிடின்
யுகம்
யுகமாய்ச் சுவாசிப்பாள்
தமிழ் அன்னை

தமிழ்
செல்வம் என்பவன்
காப்பான்
தன்
உயிர் கொடுத்தும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.