கவிதை
நெஞ்சிலோர் புதுசுகம்!
பெண்
உள்ளம் தந்த காதலிடம் நான் பாடவா
உறங்கு மின்ப இரவினிலே நான் நாடவா
இல்லமென்னும் மணமாலை நான் சூடவா
இன்பமான காதல் தேரில் நீ ஆட வா
ஆண்
கானத்து கருங்குயிலே நீ என்னருகே வா
உன் செம்பவள கனியிதழை பருக நான் வரவா
உன் விழியசைவில் கவி படைக்க நான் வரவா
இடை அழகை கவிதையிலே நான் தரவா
பெண்
தேடிவந்த தென்றலிடம் சொன்னேன்
சூடிவிட்ட மல்லிகையில் சொன்னேன்
என் நெஞ்சில் வரும் நேரமதை சொன்னேன்
என் நெஞ்சில் புது சுகம் ஒன்று கண்டேன்
என் நெஞ்சில் மோதும் நேரம் நின்று
ஆண்
உன் மல்லிகை கூந்தலிலே வண்டு
மதுவருந்தி பாடுவதை கண்டு
அசைகின்ற கொடியிடையாள் தண்டு
ஆடுதடி இடைவடிவில் இன்று