புதுக் கவிதை
செக்குச் சீமாட்டி!
கொக்காட்டிக் கொலுசாட்டிக்
கொஞ்சிக் கொச்சனை நீராட்டி …
கொப்பாட்டிக் குலையாட்டிக்
கொத்துக் கொத்தாய் கொழுநீர் வடித்து
கொண்டெனையிழுத்து வந்த கொம்மையே …
கொக்காட்டிக் கொலுசாட்டிக்
கொஞ்சிக் கொச்சனை நீராட்டி …
கொப்பாட்டிக் குலையாட்டிக்
கொத்துக் கொத்தாய் கொழுநீர் வடித்து
கொண்டெனையிழுத்து வந்த கொம்மையே …
என்னதான் மாயம் செய்தாய் கண்ணா .. !! என்னுள் இளகும் .. இந்தப் பெண்ணுள் .. புகுந்து நீ ! என்னதான் மாயம் செய்தாய் !!
இனிப்பானதொன்றை
கசப்பாக்கினான்
இல்லாத ஒன்றுக்கு
இருப்பதின் கருவறுத்து
கல்லாத கயவன் போலே
கண்ணிருந்தும் குருடானான் .. !!
உள்ளுக்குள் வெறும்
பாலை மணல்
ஊருக்கு மட்டும்
பலமுதிர்ச்சோலையாய்
சொல்லுக்குச்சொல்
தூயோர் சொல் மறைத்து
சுயநலப் பகைக்கு
சூத்திரம் போதித்தான் ..
காப்பு
கன்னியைக் கண்டதும் காதலென எண்ணுகின்ற
என்றன் பதின்ம எழில்வயதில் – அன்றொருநாள்
நான்செய்த ஓர்குறும்பை நன்றாகப் பாடுகிறேன்
ஊன்செய்தான் காக்க உவந்து !
புதுமை
செல்வதையே தூதாய்ச் செலுத்திடுவார் !
» Read more about: இரயிலிருக்கை விடுதூது »
மண்ணில் புதைந்தாலும்
விண்ணோக்கி எழுவோம்
விதைகள்!
மறு பிறப்பெடுத்த மகிழ்ச்சி,
எழுத்தாளன் முகத்தில்!
புத்தக வெளியீடு!
மூச்சைவிற்று
வாழ்க்கை நடத்துகிறான்
பலூன்காரன்!
கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? – காதல்
கடலுக்குள் விழுந்தேனே அறிவாயா?
பெண்ணாக பிறந்தது பெரும் பாவமா? – பேதை
பிணமாகி போனேனே உன் சாபமா?
தவம் இருந்தே பசிதான் மறந்தேனே –
» Read more about: கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? »
பருவ மழையில்
என் பரம்பரை
துளிர்க்கிறதா…
பருவம்
கொப்பு மாற,
பெண்மை
பூரணம் உணர்கிறது…
இனி,
இனிமை மட்டுமே
இவள் உலகில்…
பித்தனாய் ஆனேன் பூந்தமிழே – நெறி
பிறழாத கவிதைதா பொற்சிமிழே -– உன்னில்
மொத்தமாய் ஆவி உடல்
மோகனமாய்த் தந்த பின்னே
படித்தேன் – கவி – வடித்தேன்
நற்றிணையில் தமிழ் மணக்கும் பாராய் – காதல்
நர்த்தனங்கள் நிலை கொள்ளும் வேராய் – கை
பெற்றணையா தீபமென
பேரொளியைச் சிந்துகின்ற
நூலைப் – படி – காலை
திருக்குறளின் ஞானப்பால் குடித்தேன் – ஒரு
தினந் தவறா அதிகாரம் முடித்தேன் – முகில்
கருக்காக ஆன மனம்
கதிரவனாய் ஆகித்தினங்
கோர்க்கும் – ஒளி –
வாசிப்பே அறிவுக்கு வலுவூட்டும் – எங்கள்
வாழ் நாளைச் சிறப்பாக்கிப் பலமூட்டும்
தேசத்தின் பேரோங்க வழி காட்டும் – நிதம்
தெவிட்டாத தெள்ளமுதாய்ச் சுவை மீட்டும்
நேசிப்பே உள்ளத்தை நேராக்கும் – நூல்
நெடுங்காலப் பேதமையைச் சீராக்கும்
போசிக்கும் வாண்மையிலே ஆளாக்கும் – எம்
பொடுபோக்குக் கயமைகளைத் தூளாக்கும்
கருவறைக்குட் தங்குகின்ற காலந்தொட்டே – தாய்க்
கட்டாயம் நன்னூற்கள் கற்றல் வேண்டும்
பெருமளவி லறிவுடைமைப் பெருக்கெடுக்க – எம்
பெற்றோர்கள் வாசிப்பில் நிற்றல் வேண்டும்
குரு குலத்துக் கல்வி முறைத் தோற்றந் தன்னில் – முதற்
குரு நாதர் கரு தாங்குந் தாயே யன்றோ !
நிறத்தைப் போலவே
மனமும் வெள்ளை என்றவளே! – அதில்
கரும்புள்ளியை வைத்துவிட்டு
எங்கே சென்றாய்?
தேனினும் இனிமை
குரல் என்றவளே!
அதைக் கசப்பாக்கிவிட்டு
எங்கே சென்றாய்?