சுதந்திரம்

செந்நிறக் குருதிதனை சீதனமாய் பெற்றன்று வெண்ணிறத்தோலுடையான் விட்டுசென்ற பசுமை நீ… பன்னிற மொழியுடையோர் பாரதநிறம் சேர்த்து கண்ணிறச் சக்கரம் சுழன்ற காண்போரின் முத்திரை நீ… மண் நிறக்கடை எல்லை மதிற்ச்சுவர் முன் நின்று பொன்னிற ஒளிதனிலே மின்னிடும் முச்சுடரே… அந்நிய நிறத்தோனிடம் அடிமை நிறம் இல்லையென உன் நிற ஒளி வீசும் ஒப்பில்லா முகவரியே… எம் தேச நிறமென்றும் எக்கு திக்கும் புகழாட உம் கோசக்குரல் வழியே உரக்கச்சொல் சுதந்திரமே…

ஞானமெது..?

இனிப்பானதொன்றை கசப்பாக்கினான் இல்லாத ஒன்றுக்கு இருப்பதின் கருவறுத்து கல்லாத கயவன் போலே கண்ணிருந்தும் குருடானான் .. !! உள்ளுக்குள் வெறும் பாலை மணல் ஊருக்கு மட்டும் பலமுதிர்ச்சோலையாய் சொல்லுக்குச்சொல் தூயோர் சொல் மறைத்து சுயநலப் பகைக்கு சூத்திரம் போதித்தான் .. !! உன்மதம் என்மதம் உன் நாடு என் நாடு உன் குலம் என் குலமெனும் அங்குல மங்குல மந்திரமதை ஆணியாய் உள்ளிறக்கித் தணியாத தாகம் தீரத் தன் இன Read more