இரயிலிருக்கை விடுதூது

காப்பு கன்னியைக் கண்டதும் காதலென எண்ணுகின்ற என்றன் பதின்ம எழில்வயதில் – அன்றொருநாள் நான்செய்த ஓர்குறும்பை நன்றாகப் பாடுகிறேன் ஊன்செய்தான் காக்க உவந்து ! புதுமை செல்வதையே தூதாய்ச் செலுத்திடுவார் ! என்றாலும் செல்வதெலாம் வெல்லத்தான் சென்றிடுமோ ? – சொல்லுகின்ற தூதைத் திறம்படவே சொல்வதுவே நற்றூதாம் ! ஈதை உணர்ந்திடுவீ ரிங்கு ! நூல் ஓடும் இரயிலில் உட்கார்ந்து கொண்டுயான் பாடிக் கவிதைப் பரவசத்தில் – ஈடில்லாக் கற்பனைக் Read more

செந்தமிழ்ச் சீர்கவி பாரதி

முண்டாசு கட்டிய பாரதியே செல்வ ……. பாரதியே முத்தமிழ் கொட்டிய அண்ட சராசரம் எங்கிலுமே கவி ……. ஆக்கிக் கொடுத்தனை வாழியவே! சித்திர பானுவில் கார்த்திகையில் தமிழ்ச் ……. சிந்திட வந்துப் பிறந்தனையே! இத்தரை மக்களு மின்புற வேகவி ……. ஈன்று கொடுத்துச் சிறந்தனையே! உத்தம யோகியே ஊருக்குள் சாதியை ……. உற்ற நெருப்பில் எரித்தவனே! சித்தனே செந்தமிழ்ச் சீர்கவியே உனைச் ……. சிந்தனை தன்னில் நிறைத்தனமே! பெண்ணின் சுதந்திரம் Read more