மரபுக் கவிதை
தீபாவளி -அன்றும் இன்றும்
ஏற்றிடுவோம் தீபத்தை நன்னாளில்
எத்திக்கும் பரவிடுமே மகிழ்ச்சிவெள்ளம்
போற்றிடுவோம் பண்டிகையை அந்நாளில்
பொங்கிடுமே புதுவாழ்வு மக்களிடம்
மாற்றங்கள் வந்திடுமா நாள்தோறும்
ஏற்றிடுவோம் தீபத்தை நன்னாளில்
எத்திக்கும் பரவிடுமே மகிழ்ச்சிவெள்ளம்
போற்றிடுவோம் பண்டிகையை அந்நாளில்
பொங்கிடுமே புதுவாழ்வு மக்களிடம்
மாற்றங்கள் வந்திடுமா நாள்தோறும்
காலம் கனியுமா
கனவுகள் பலிக்குமா
கவலைகள் கலையுமா
கன்னி மனம் மகிழுமா!!
தண்ணீரில் மீன்
அழுதால் தெரியுமா
கண்ணீரில் போடும்
கோலம் நிலைக்குமா!!
மலராத மொட்டதனின் இதழ்கி ழித்து
மதுவுண்ட வண்டொன்றைப் பார்த்த துண்டா
புலராத இரவுக்குள் புணர்தல் போன்று
புரிந்திட்டார் வன்செயலைக் கயவர் சில்லோர் !
தெலுங்கில் எழுதியவர்: உஷா துரகா
காருக்குக் குறுக்கே வந்தவனை
வாய் வலிக்கத் திட்டிய அரைமணிக்கு
அன்று மௌன விரதம் இருப்பது
நினைவு வந்தது
இரண்டாவது குலாப்ஜாமூன்
தொண்டைக்குள் இறங்கும்போது
அன்று உபவாச தீட்சை இருப்பது
நினைவு வந்தது
ஹாய்…குட் மார்னிங்..
» Read more about: கவிதை: விரதம் »
தோன்றிய கால முதல் தூண்டாய்
மணி விளக்காய் தோன்றிய.
தமிழ்த் தாயின் தலைமகனே.
குமணன் தலை கொடுக்க முன்வந்தான்
நீயோ தன்னையே தமிழுக்கு தந்தாய்
புறநானூறு அகநானூறு ஆக
மொத்தம் எண்ணூறு என
எண்ணிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில்
சங்கத் தமிழின் சங்கதிகளை
சரித்திரமாய் சொன்னவன் நீயே
மனிதகுலத்தின் போக்கு வரத்திற்கு
கோடு கிழித்த வள்ளுவனுக்கு
வான் புகழ் கொண்ட சிலை அமைத்தவன் நீயே
உரை வீச்சில் உள்ளத்தை உருக வைத்தவனே
மூட நம்பிக்கையை முட்டித்தள்ள
முழு வீச்சில் முயன்றவனே
சினிமாக்கள் அறியாமையை விதைத்தபோது
வாழ்க்கையின் யதார்த்தத்தை அறிவோடு கலந்தவன் நீயே
கதா கலட்சமாக கவி அரங்குகள்
காட்சி அளித்தபோது கவி
அரங்குகளில் புரட்சி செய்த புதுமையாளனே
கழிக்க முடியாத கடன் பிறப்புகளை
பெற்ற கலைஞரே.
தீப்பிழம்பில் குளித்தெழுந்த தீந்தமிழே!
தெள்ளுற்ற தமிழ்நாட்டின் முகவரியான திராவிடமே!
தமிழுக்கோர் தொண்டாற்றி கசிந்து கனிந்த பழமே!
செங்கதிரோன் சாயலதில் வார்த்தெடுத்த கரிகாலனே!
எங்கள் சேது சமுத்திரமே!
சாதீயம் பேசி சாக்காடாயிருந்த கூட்டம்
சித்தம் தெளிய வந்த சிலப்பதிகாரமே!
மௌனப் புன்னகை
கொட்டிய
உந்தன் வதனத்திலிருந்து
ததும்பி ஓடும்
அன்பின் வாசனையை
அள்ளிக் குடிக்கிறேன்…
அது
நீண்ட சஞ்சரிப்போடு
எந்தன் கரங்களில் நசிபட்டு
என்னைத் தாண்டி
நெடுதூரம் ஓடியது
ஆனந்தச் சாயல்கள்…
தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை
என் தேசத்தில் தேடுகின்றேன்
வறுமையற்ற வாழ்வாய்
எனக்கான சந்ததிகளில்
விழிகள் நிறைய
கண்ணீரோடு கையேந்தும்
சிறுவர்களின் கெஞ்சலும்
தோல்சுருங்கி
கைவிடப்பட்ட மூதாட்டியின்
முனகலோடும்
நடுங்கும் கைகளில்
கைத்தடியின் ஆதரவில்
கால்இடறி ஆதரவின்றி
விழப்போகும் முதியவரிடமும்
தேடுகிறேன்
வறுமையற்ற வாழ்வை.
பூஞ்சோலை மணக்கிறது.
ஒவ்வொரு பூக்களுமே சிரிக்கிறது.
பூவாக மொட்டுகள் துடித்திடவே.
பொன்னூஞ்சலில் மனம் ஆடிடவே.
மாந்தோப்பில் கிளிகள் கொஞ்சிடவே
மாம்பழத்தை வண்டுகள் துளைத்திடவே
மேகமதைக் குயில்கள் அழைத்திடவே
மேனியெல்லாம் குளிர் சிலிர்த்திடவே
கார்மேகத்தால் மயில்கள் ஆடிடவே
காட்சிகளைக் கண்கள் பதித்திடவே
தென்றல் தேகத்தைத் தழுவிடவே
தேனிசையை மூங்கில்கள் இசைத்திடவே.