புதுக் கவிதை
நீதான் எந்தன் நிழல்
மௌனப் புன்னகை கொட்டிய உந்தன் வதனத்திலிருந்து ததும்பி ஓடும் அன்பின் வாசனையை அள்ளிக் குடிக்கிறேன்… அது நீண்ட சஞ்சரிப்போடு எந்தன் கரங்களில் நசிபட்டு என்னைத் தாண்டி நெடுதூரம் ஓடியது ஆனந்தச் சாயல்கள்… விரித்துப் பார்க்கையில் கொம்புகள் தள்ளி மடிந்து போன கனவுகளைச் சேர்த்து புதுப்பாடம் புகட்டியது நீதான் எந்தன் நிழற் படமென.!!!
