கவிதை

புகலிடம் தாராயோ?

உலவும் தென்றல் குளிரெனவே - என் உள்ளச் சோலையில் பூத்தவளே! இலவு காத்த கிளிபோல எனை ஏங்க வைத்தே சென்ற தெங்கே? பிரிவென் கின்ற புயற்கரத்தால் - உயர் பாசச் சுடரை அணைத்துவிட்டுச் சருகாய் என்றன் வாழ்வதனைத் - தரையில் சரியச் செய்தே சென்றதெங்கே?

கவிதை

மனதில் ஒரு கீறல்!

நேற்றைய சத்தமோ, நிசப்த நிலையில் நேரும் என்று கொஞ்சமும் நினைத்தும் பார்க்காது; நேசத்தின் தோற்றம் வெறும் ஏமாற்றமாக நேர கால மாற்றத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியானது ஆசைகள் ஒவ்வொன்றும் ஆற்றோடு அடியுண்டு ஆதரவு தேடிய வெளிச்சமும் அணைந்து இருட்டில் ஆழமும் அறியாமல், போகும் திசையும் தெரியாமல் ஆரவாரம் எல்லாமே அடங்கி ஒடுங்கிய நிலையில் வேண்டும் காட்சிகளை மாற்ற வழி தெரியவில்லையே ...

கவிதை

மனசாட்சி

மனசாட்சியை இழப்பதும் இல்லாமல் செய்வதும் மானிலத்தை அவமதிப்பதாகும்... மனித புலத்திற்குள், வனவிலங்குகள் வாசம் செய்வதாக! மனசாட்சியைக் கொன்று வாழ்தலென்பது, காலமுனை சிரச்சேதம் செய்யும் தருணமாகிவிடும்!

கவிதை

கவிதை துளிகள்

எழுதி முடித்த கவிதைகளின் முதல் இரசிகனாய் என் பேனா கசங்கியிருந்த காகிதம் பட்டமாகியது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காணாமல் போன குழந்தை கிடைத்து விடுகிறது சுவரொட்டிகளில்

புதுக் கவிதை

புதுமைப் பெண்ணிவளா?

அலாரம் அடிக்கு முன்னே
அயராதக் கண்களுடன்
ஆதவன் அவளழகு முகத்தில்
விழித்தே சிரிப்பான் !

தட்டி எழுப்பிய செல்வங்களை
தாமதமாகாமல் பள்ளிக்கு அனுப்பித்
தாரமாகி,

 » Read more about: புதுமைப் பெண்ணிவளா?  »

கவிதை

பாசக்கடல்

துன்பக் கடலினிலே - நான் துயர்படும் வேளையிலே! இன்பமென வருவாள் - என் எண்ணத்திலே நிறைவாள்! பாலில் சுவைசேர்த்தே - என்னைப் பாரடா கண்ணாவென்பாள்! நூலில் இழைபோல - அவள் நுண்ணிய அறிவுடையாள்!

கவிதை

தாய்மை

மழை என் மீது கருணை காட்டிய அடுத்த நொடியில் மூச்சு வாங்க கதவைத் திறந்தேன் அதிசயம் ! அதிசம் ! பக்கத்து வீட்டின் நேற்றைய சண்டையின் தோழி என் பிள்ளைக்கு உணவூட்டுகிறாள் அவளின் உடலிலிருந்து !

கவிதை

சுரதா

சோகமில்லா மன்னனெவன்? அசோகன் என்பார்! சுடுநெருப்பின் தலைவன்தான் ஞாயிறென்பார்! மேகத்தின் எச்சில்தான் மழையாம்! மதுவை அருந்தாமல் மயங்குவதே மாலை நேரம்! ஊகத்தை மொழிபெயர்த்தால் உண்மை யாமோ உன்னுடைய மொழிபெயர்ப்பே பிள்ளை என்பார்! வேகத்தில் எப்போதும் எழுதிடாமல் விரும்புங்கால் எழுதுகிற கவிஞன் என்பார்!

கவிதை

மைக்காரி

கண்டும் காணாக் கண்மணியே - போகும் கார ணமென்ன பொன்மணியே ! வண்டு விழியே மோகினியே - நீ வாராய் அருகே மாங்கனியே ! மலரும் வண்டும் பேசுதடி - என் மனதில் காதல் வீசுதடி !

கவிதை

உழைப்பு

tamilnenjamசொந்த நிலமே யானாலும்
சோற்றுக்காக உழைத்திடனும்
பந்தம் உறவு வலுப்பெறவே
பாசத்துடனே பழகிடனும்
தங்கம் போல் விலைபெறவே
தகுதி நன்றாய் அமைந்திடனும்
விந்தை புரியும் உலகமிது
வினயத் துடனே வாழ்ந்திடனும்

 » Read more about: உழைப்பு  »