கவிதை
புகலிடம் தாராயோ?
உலவும் தென்றல் குளிரெனவே - என் உள்ளச் சோலையில் பூத்தவளே! இலவு காத்த கிளிபோல எனை ஏங்க வைத்தே சென்ற தெங்கே? பிரிவென் கின்ற புயற்கரத்தால் - உயர் பாசச் சுடரை அணைத்துவிட்டுச் சருகாய் என்றன் வாழ்வதனைத் - தரையில் சரியச் செய்தே சென்றதெங்கே?